வாய்ப்பு
எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி
எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி
பிரபஞ்சத்தின் இசையுடன்……உன் இதய துடிப்பின் இசையும்…அற்றை திங்கள் பேரொளியில்….உன் முகம் கண்டு என் உள்ளம் குதிக்க…துள்ளும் உள்ளத்தின் கடிவாளம் உனது விழிகளில்…..கட்டி இழுத்து …. எட்டி நிறுத்தி….எனை அலையென அலைக்கழிக்கிறாய்….மீண்டுமோர் பார்வை பார்த்தால்(ள்)....பேரலையாக உனையும் அள்ளி அணைத்துச் செல்லேனோ…. ♥♥♥?!!! - ஆலோன் மகரி
சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி
காமத்தில் இழுத்தனைக்கும் பொழுதிலும்....காதலை உணர்த்த...... - உன்னால்மட்டுமே முடிகிறது.... - ஆதலால்உனை பிரியா வரம் வேண்டி.....இயற்கையிடம் பிச்சை கேட்கிறேன்... ♥♥♥ - ஆலோன் மகரி
திமிராய் நிராகரத்தவளே... - உன்திமிர் கண்டே அடிமையாகிபோனேன்....நம் ஒழுக்கத்தின் திமிரை ஒன்றாக்கி புது திமி(உயி)ர் உருவாக்குவோம் வா...... - ஆலோன் மகரி
4 - வலுசாறு இடையினில் அந்த மாலை வேளை நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.பயந்து பின்னே வந்த பெண்ணை நங்கை அருகில் நிற்க வைத்துவிட்டு, “யாரு டா நீங்க ? எந்த ஊரு ? பொம்பள புள்ளைங்ககிட்ட வம்பு பண்றதுக்குண்ணே கெளம்பி வருவீங்களாடா ? “, என அதட்டியபடி முன்னே வந்தாள்.“நீ யாரு...
3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் இருக்கறபோ தான் கல்யாணம் முடியும் “, ஜோசியர் தயங்கியபடியே கூறினார்.“என்ன சிரமம் வரும் ஜோசியரே ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க “, காமாட்சி பதற்றமாகக் கேட்டார்.“எப்டி வேணா வரலாம் மா .. ஆனா இந்த பொண்ணு கல்யாணம் யார் நினைச்சாலும் தடுக்க முடியாது.. இன்னிக்கி இருந்து 3 மாசம் முடியறப்போ கல்யாணம் முடிஞ்சி இருக்கும்““யோவ் ஜோசியரே .. என்ன உனக்கு எவ்ளோ...
21 - மீள்நுழை நெஞ்சே "வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?", எனத் துவாரகா வியந்தபடிக் கேட்டாள். "அவனுக்கு சுத்தமா இல்லைன்னா அவ்வளவு தான். ஓசிடி இருக்கு…. சோ ரொம்பவே சுத்தம் பாப்பான்…", இனியா சிரிப்புடன் கூறினாள். "அப்ப என் வீட்ட நீ தான் க்ளீன் பண்ணுவ வில்ஸ்", எனத் துவாரகா சிரிப்புடன் கூறினாள். "நீ இப்படி கனவு காணு அவன் உன்னை பெண்ட் நிமித்திடுவான்…. வில்ஸ் காமன் ரெஸ்ட் ரூம் எங்க?", என இனியா கேட்டாள். "அந்த பக்கம் இருக்கு…. அந்த...
2 - வலுசாறு இடையினில் “ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட கூடாது “, என மருதன் என்பவன், கரும்பு காட்டுக்கு மத்தியில் இருந்த பாதையில் முள்ளை போட்டு மேலே மண்ணை தூவிக் கொண்டு இருத்தனர் இருவரும். “டேய் கண்டிப்பா இந்த எடத்துல தான் செய்யணுமா ? கரும்பு காடு அவனுக்கு ரொம்ப வசதியா இருக்கும் டா .. வேற எடத்த பாக்கலாம் ல ?”, பாண்டி என்பவன் கேட்டான் . “இதான் டா...
20 - மீள்நுழை நெஞ்சே அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா. "என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?", எனத் தூக்கத்திலேயே உளறினாள். "ஓஹ் மேன்…. இந்த பொண்ணு இப்படி தூங்கிட்டு பேசினா எவன் வேணா ரூம்ல இருக்கறத தூக்கிட்டு போவான்… இனியா …...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….