3 – காற்றின் நுண்ணுறவு
3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? ", என பதற்றமாகப் பேசினாள். "பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. ...