Tag: self

ஏகாந்தமல்ல…

போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்‌......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில் ஒன்றோ அல்லது அனைத்துமோ.....அனைத்து பாத்திரத்திலும் அன்பு பெற்று நிறைந்தால் அன்றி....ஏகாந்தமென்ன ‌.....வாழ்தலே சாபம் தான்....இவை ஏதுமின்றியோ....காலத்தின் தேவையானதின்றியோ வாழ்ந்தால்....அது வாழ்தலல்ல....அத்தனிமை ஏகாந்தமுமல்ல.... -ஆலோன் மகரி

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

33 – மீள்நுழை நெஞ்சே

33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்."ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா துவாரகா? அவன் நல்லபடியா நடந்துகிட்டானா?", என அவரே ஆரம்பித்தார்."எங்க….‌ பயங்கரமா டென்ஷன் பண்ணிட்டார் அத்த… ...

31 – மீள்நுழை நெஞ்சே

31 - மீள்நுழை நெஞ்சே "நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….", என அன்று காலையே கோபமாகப் பேசினான்."நான் இப்ப என்ன பண்ணேன்…. எனக்கு காலைல அந்த டிபனே போதும். அலைச்சல்ல சாப்பிட முடியாது‌. நீங்களும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கறீங்க… அதான் வேணாம்னு சொன்னேன்…""உனக்கு வேணாம்ங்கற வரைக்கும் நின்னிருக்கணும். நீ ஏன் என் விஷயத்துல மூக்கு நுழைக்கற….", எனக் கேட்டான்."உங்களுக்கு ...

அந்தர பயணம்

செயற்கையான இயற்கை வேண்டாம்....நூதனமான தடங்கள் வேண்டாம்.....அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்...பழைய நான் வேண்டவே வேண்டாம்.....புதிய நான் முற்றிலும் வேண்டாம்....நிஜமான "நான்" யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது....இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்..... ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்....!!!- ஆலோன் மகரி

உணர்வேனா?

இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்...குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது...மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்....இருதுருவ உணர்வுகள்....சட்டென உணர்வில்லா வெறுமைகள்....இதுவா? அதுவா? எதுவோ? நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை... காரணம்...இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை....ஒன்றுமே இல்லை.....இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது....என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது...உணர்வேனா???- ஆலோன் மகரி

நடனம்

நடனம்....எத்தனை அற்புதமான கலை....மனதின் லயத்திற்கு ஜதி மாறாமல் ஆடிவிடும்....கோபமோ....அழுகையோ....வேண்டலோ....ஒதுக்கமோ...இணக்கமோ....ஆனந்தமோ....எல்லாம் அதன் வெளிப்பாட்டில் கோபுர உயரம் தான்.....மெல்ல மெல்ல அஸ்திவாரத்தை பலமாக்கி...உயர்ந்தோங்கி நின்று தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துவிடும்....அப்படித்தான் .... மாமாங்கமாக மறந்து போயிருந்த உற்சாகம்...சட்டென மேலெழும்பி வந்துவிட்டது.... - என்அஸ்திவாரத்தை கருவியாக இயக்கி ஆடவைத்தது..‌சிறிது நேரம் தான்.... இன்னும் கூட கொஞ்சம் நீண்டிருக்கலாம்...மறந்துவிட்ட உற்சாகத்தை....தொலைத்துவிட்ட சுயத்தை.....கட்டப்பட்டிருந்த மனதை.... எதுவோ.... என்னவோ.... மீண்டும் கிடைத்த உணர்வு.....இன்றோர் நாள் மட்டுமா? இனி எப்போதும் ...

மிச்சம்

அமர்ந்தே இருக்கிறேன்.... ஒற்றைக்கால் திடத்தில்.... மூன்று கால்கள் சமாளித்திருக்கும் இருக்கையின் மேல்... ஓடத் தொடங்கும் முன் நின்ற ஓட்டம்.... கீற்றாக நினைத்த வெளிச்சம்.... கைப்பிடித்து அழைத்துச் சென்று சூன்யத்தில் தள்ளிவிட்டது.... சூன்யமென்றால் வெறிக்க வேண்டுமா? மாட்டேன்.... அனைவரும் செய்வதைச் செய்யமாட்டேன்.... சூன்யத்தைச் சுற்றி வர ஆசைப்பட்டேன்... சூன்யத்தில் தானே பிரபஞ்சம் உருவானது.... வெற்றிடத்தில் தானே அனைத்தும் மிதக்கிறது...?! வெற்றிடம்..... வெறுமையான இடம் அல்லவா? இதை வெற்றியின் இடம் என்றும் கூட ...

20 – மீள்நுழை நெஞ்சே

20 - மீள்நுழை நெஞ்சே   அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது‌. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா. "என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?", எனத் தூக்கத்திலேயே உளறினாள். "ஓஹ் ...

ஆசுவாசம்

கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ... - உன்னைஉணரத் தவறிய வாழ்வில்... - ஆலோன் மகரி

Page 1 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!