Tag: suspense

1 – ருத்ராதித்யன்

91 – ருத்ராதித்யன்

91 - ருத்ராதித்யன் அப்போது ஓர் மானை வேட்டையாடியுண்டு, இரத்தம் சொட்டும் முகத்துடன் நரசிம்மன் பின்னே வந்து நின்றான் மகதன்.  நரசிம்மன் அவனைக் கண்டதும் தாவி விழுந்து மகதன் முகம் முழுதும் முத்தம் கொடுத்து தன் மனம் சுமந்திருந்த வலியினை மகதன் மேல் படுத்தபடி இறக்கிக் கொண்டிருந்தான்.  மகதன் அவனது அதீத இதயத்துடிப்பை உணர்ந்து அவனுக்கு உடலைக் கொடுத்து, தலையை அவன் கைகளுக்கு வாகாக வைத்துப் படுத்துக் கொண்டான்.  சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நரசிம்மன் ...

1 – ருத்ராதித்யன்

90 – ருத்ராதித்யன்

90 - ருத்ராதித்யன்  நரசிம்மனும், மகதனும் சதுப்புநில மலை நோக்கி கடல் வழியாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். அந்த மலையைச் சுற்றி சதுப்பு நிலமாக, சேரும், சகதியான புதைக்குழிகளும் நிறைந்திருக்கும். ஆதித்ய நாட்டின் தென்-மேற்கு மூலையில் அது அமைந்திருந்தது. இரண்டாம் அம்புவிக் கோட்டைக்கும், மேற்காட்டு கோட்டைக்கும் நடுவே அந்த சதுப்பு நிலமலை அமைந்திருந்தது. அந்த பகுதிகளில் நிலம் ஊர்ந்து செல்லும் பூச்சிகளும், ஒரு காலத்தில் வானை முட்டும் உயரம் கொண்ட அடர்ந்த முடிகள் ...

1 – ருத்ராதித்யன்

89 – ருத்ராதித்யன்

89 - ருத்ராதித்யன்  அமரபுசங்கன் தனது உடலை கையாள முயன்றுக் கொண்டிருந்தான். வன யாத்திரை சிங்கத்துரியனின் கட்டளையின் பேரில் அவனது உடல் அசைவுகளையும் இதயதுடிப்பையும், நாடிகளின் துடிப்பையும் கண்காணித்து குறித்துக் கொண்டிருந்தாள். ஆருத்ரா வனயட்சியிடம் சில விஷயங்களை அறியவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய கேள்விகளை மனதில் அணிவகுத்தபடி தனது அறையில் இருக்கும் உப்பரிகையில் அமர்ந்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். ருத்ரக்கோட்டை அரசரும் அரசியும் தான் மிகவும் மனம் கனத்து தங்களது அறையில் அமர்ந்து இருந்தனர். ...

1 – ருத்ராதித்யன்

88 – ருத்ராதித்யன்

88 - ருத்ராதித்யன்  மூன்று உருவங்களையும் அவன் நீரில் விட்ட ஈட்டி தொடும்படியான தூரத்தில் நடு புள்ளியில் வந்து நின்று படக்கினை வட்டமாக செலுத்தினான். அப்படி செலுத்தும் போது தான் அவனுக்கு இன்னொரு விஷயம் கண்களில் பட்டது. முதலில் ஒரு உருவம் பின்னே செல்ல அதற்கு இரு நொடிகள் வித்தியாசத்தில் மற்ற இரண்டு உருவங்களும் பின்னால் சென்றன. நீரில் அவை பின் செல்வது நடுவில் இருந்து பார்த்தவனுக்கு இன்னல் தீர்க்கும் மார்க்கமும் ...

1 – ருத்ராதித்யன்

87 – ருத்ராதித்யன்

87 - ருத்ராதித்யன்  “தாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் ஐயா? இது எங்களின் தவறு தான். ஒரு மனிதனின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று ஓர் உயிரை இழந்தபின் தான் புரிகிறது. இவனைப் பற்றி அப்போதே இங்கே ஆள் அனுப்பி விசாரித்து இருந்தால் இப்படியொரு நிலை அவளுக்கு வந்திருக்காது. என் ஐயன் ஊர் தலைவர் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக வேறெந்த கேள்விகளும் இன்றி பெண்ணை மனம்முடித்து கொடுத்தார்..” எனக் கூறியவள் ...

1 – ருத்ராதித்யன்

86 – ருத்ராதித்யன்

86 - ருத்ராதித்யன் “ஆம் யுவராஜனே.. உனது வாழ்நாளில் நீ செய்யும் அனைத்தும் சேரும் ஒரே புள்ளி பைரவக்காடு தான். சில நூறு வருடங்கள் முன்னே உனது பாட்டனார் அந்த பாதையைக் கணித்து ஓர் கல்லில் வடித்து வைத்துள்ளார். அவரது மனைவி இறந்துபோனதால் அவரால் அங்கே செல்லமுடியவில்லை. தாம் தம்பதி சமேதராக அங்கே செல்வது உறுதிப்பட்டுவிட்டது. தங்களது தர்மபத்தினி அந்த பாதையை கண்டுக்கொண்டார். இன்னொரு பெண்ணும் அறிந்து கொண்டாள். அவளால் மிகப்பெரும் ...

1 – ருத்ராதித்யன்

85 – ருத்ராதித்யன்

85 - ருத்ராதித்யன்  “மகதா.. நீரின் போக்கில் அடிபடாமல் செல்.. உன் பின்னோடு வருகிறேன்..” நரசிம்மன் கூறிமுடிக்கும் முன் மகதன் வெகுதூரம் நீரினால் அடித்து செல்லப்பட்டான். அவ்விடத்தில் ஆறுகள் ஒன்று கலப்பதால் நீரின் போக்கும் ஒரு பக்கமாக இன்றி எதிரும் புதிரும் அடித்துக் கொள்வது போல ஓடிக்கொண்டிருந்தன. அங்கே சுழல்களும் அதிகமாக உருவாகி தன் பக்கம் வரும் அத்தனையையும் உள்ளே இழுத்துக் கொண்டிருந்தன. நரசிம்மன் ஒரு சுழலில் சிக்கி அதிலிருந்து வெளிவரும்போது மீண்டும் ...

1 – ருத்ராதித்யன்

84 – ருத்ராதித்யன்

84 - ருத்ராதித்யன்  கிழக்கு மலைகளில் இருந்து வெளியே வந்ததும் நரசிம்மனும், மகதனும் தென்கிழக்கு திசை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களை தேடி சென்ற சேயோன் ஒரு நாள் பொழுதை காடுகளில் கழித்து விட்டு இல்லம் சென்றான். அவனைத் தேடி அரசனின் பணியாளும் வந்து நின்றான். “அரசர் தங்களை உடனே வரச்சொன்னார்..” பணியாள். “இரண்டு நாழிகையில் வருகிறேன். இப்போது தான் காட்டில் இருந்து வந்தேன் என்று அரசரிடம் தெரிவி..” எனக் கூறியவன் அவசரமாக ...

1 – ருத்ராதித்யன்

83 – ருத்ராதித்யன்

83 - ருத்ராதித்யன்  அமரபுசங்கனின் உடல் மறைய தொடங்கி இரண்டு நாழிகையில் அவனது உடலே முழுவதுமாக மறைந்து போனது. வனயட்சி தவிர மற்றவர்கள் நெஞ்சம் பதறி அவன் உடல் கிடத்தப்பட்டிருந்த திட்டிற்கு  வேகமாக வந்தனர். “யாரும் அருகே செல்ல வேண்டாம்.. அவரது உடல் அந்த திரவத்தை முழுதாக உள்வாங்கி இருக்கிறது. இன்னும் ஒரு நாழிகையில் அவரது உடல் நமது கண்களுக்கு தெரியும்.. சிங்கம்மா.. இங்கு வாருங்கள்.. இந்த வரைப்படத்தை சரியாக பொருத்துங்கள்..” எனக் ...

1 – ருத்ராதித்யன்

82 – ருத்ராதித்யன் 

82 - ருத்ராதித்யன்  சேயோனும் அவனது தந்தையும் கிழக்கு காடு நோக்கி பயணத்தை தொடங்கினர். அந்த நேரத்தில் தான் மகதனை அந்த விடலை சிறுவன் வேட்டையாட முனைந்து நரசிம்மனிடம் சிக்கியதும் நிகழ்ந்தது. “தாங்கள் யார்?” அதிகுணன் ஆர்வமுடன் கேட்டான். “நான் வனத்தில் திரிபவன்.. இந்த புலிக்கு இணை தேடி வந்தேன்.. யார் நீ? விஸ்வக் கோட்டையை சேர்ந்தவனா? அந்த வீரன் யாரை சேர்ந்தவன்?”, என மகதன் பிடித்து வைத்திருந்தவனை பார்த்தபடி கேட்டான். “அவர் எனது அத்தான்.. ...

Page 1 of 18 1 2 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!