20 – ருத்ராதித்யன்
20 - ருத்ராதித்யன் தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் யாத்ரா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இருளில் வரைந்த ஓவியமாக மலைத்தொடரும், இரவின் பனியும், பல செடிகொடி மரங்களின் மணமும் நாசியை துளைக்க, அதனை மெல்ல மெல்ல சுவாசித்தபடி இருந்தாள். மேலே நட்சத்திரங்களை பார்க்க மேற்கூரையை திறந்துவிட்டிருந்தாள். அதற்கு மேல் கண்ணாடி கூரை ஒன்றிருந்தது. ஏற்கனவே சிலுசிலுவென்ற காற்று வீசுவதால் கண்ணாடி மேலடுக்கை திறக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு வந்தாள். அவள் முகம் எதையும் வெளிகாட்டவில்லை. முகத்தில் ...