aalonmagari

மலர்

தேனூறும்  மலராய்  நான் இல்லை......தேன் தேடும் வண்டாக நீ வரவில்லை.....உன் கூடு தேடி வந்தாயா?உன் கூ(வீ)டாய் எனை மாற்ற வந்தாயா?கருவண்டாய் நீ திரிந்து.... - என்கருவிழியில் நீ சிக்கி கொண்டாய்.....முதல் அழைப்பு யார் விடுக்க ?முதல் முத்தம் எப்போது சுவைக்க... ?தேனோடு காத்திருக்கும் மலராக நான்..... ♥ - ஆலோன் மகரி

இதயம்

உடைந்த இதயத்தை சேர்க்க ... உன் இதயத்தை இடையில் வைத்து.. என் இதயத்தை தைக்கிறாய்.... ஊசியுடன் நூலாய் உன் உதிரம்... என் உதிரத்துடன் ஊற்றாய் ஊற... உன்னில் நான் என்னில் நீயாக... - ஆலோன் மகரி

நங்கை

பாண்டியன் முத்தாய் உனது வரிகள்….ஜடாவர்மன் உனை அறியாமல் இருந்தானோ?முத்தை களவாடியது நீ … - அதை அறியாதுசேரனுடன் போர் புரிந்தானோ…வீரபாண்டியனாய் நீ வந்தால்….. - உனைதிருடும் நங்கையென நான் வரவாே?? - ஆலோன் மகரி

காதல் கைக்கோர்க்க…

இராஜவீதி மாடத்திலே.....மாளிகையின் ஓரத்திலே....ஓடி வந்து நீ ஏற...பதுங்கி வந்து நான் பார்க்க !அரண்மனை ஓடத்திலே...நீயும் நானும் கவிபாட !காட்டாறும் வந்ததம்மா....உனை அடித்து சென்றதம்மா...!!உன்னைத் தேடி நான் வாட....எந்தன் உள்ளம் நொந்ததடி.... !!!என் உயிர் பிரியும் முன் - நீவந்து கைகொடுத்தால்.....தர்மனின் கை உதறிவிட்டு - உந்தன்கைப்பிடிக்க வருவேன்.....மீண்டும் கவிபாட..... !!!!!!!! - ஆலோன் மகரி

சங்கமம்

கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி

வாய்ப்பு

எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு  ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி

பேரலை

பிரபஞ்சத்தின் இசையுடன்……உன் இதய துடிப்பின் இசையும்…அற்றை திங்கள் பேரொளியில்….உன் முகம் கண்டு என் உள்ளம் குதிக்க…துள்ளும் உள்ளத்தின் கடிவாளம் உனது விழிகளில்…..கட்டி இழுத்து …. எட்டி நிறுத்தி….எனை அலையென அலைக்கழிக்கிறாய்….மீண்டுமோர் பார்வை பார்த்தால்(ள்)....பேரலையாக உனையும் அள்ளி அணைத்துச் செல்லேனோ…. ♥♥♥?!!! - ஆலோன் மகரி

வாராயோ ?

சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி

பிச்சை

காமத்தில் இழுத்தனைக்கும் பொழுதிலும்....காதலை உணர்த்த...... - உன்னால்மட்டுமே முடிகிறது.... - ஆதலால்உனை பிரியா வரம் வேண்டி.....இயற்கையிடம் பிச்சை கேட்கிறேன்... ♥♥♥ - ஆலோன் மகரி

திமிர்

திமிராய் நிராகரத்தவளே... - உன்திமிர் கண்டே அடிமையாகிபோனேன்....நம் ஒழுக்கத்தின் திமிரை ஒன்றாக்கி புது திமி(உயி)ர் உருவாக்குவோம் வா...... - ஆலோன் மகரி

Page 19 of 27 1 18 19 20 27

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!