Tag: சுயம்

28 – மீள்நுழை நெஞ்சே

28 - மீள்நுழை நெஞ்சே அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை அதிகம் அசைக்காமல், பாரம் தூக்காமல் இருக்கும்படிக் கூறி அனுப்பினர்."என் வீட்டு சாவிய குடுங்க. இப்ப நான் நல்லா இருக்கேன்", என வில்சன் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்டாள்."ராக்ஸ்…. இங்கேயே இரு…. ரெண்டு பேரும் வாடகைய ஷேர் பண்ணிக்கலாம்….", என வில்சன் கூறவும் முறைத்தாள்."அப்ப ...

26 – மீள்நுழை நெஞ்சே

26 - மீள்நுழை நெஞ்சே அன்றிரவு கண்விழித்த துவாரகா அருகில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த லில்லியை அழைத்தாள்."லில்லி…. "தூக்க கலக்கத்தில் பாதி கண் திறந்த லில்லி துவாரகா முழித்திருப்பதுக் கண்டு,"வில்…. ராக்ஸ் வோக்டு அப் …. கம் ஹியர்", என குரல் கொடுத்துவிட்டு துவாரகா அமர படுக்கையை ஒரு பக்கமாக உயர்த்தினாள்."எப்படி இருக்க ராக்ஸ்? வலிக்குதா?", எனப் பரிவோடுச் சற்றுப் பயந்தபடி கேட்கும் லில்லியைக் கண்டு அவளுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது‌."ஆப்ரேஷன் செஞ்சா ...

25 – மீள்நுழை நெஞ்சே

25 - மீள்நுழை நெஞ்சே "குட் ஈவினிங் சார்லஸ்…‌ ", எனப் புன்னகையுடன் அவரெதிரில் இருந்த இருக்கை நோக்கிக் கைக்காட்டியதும் அமர்ந்தாள்."குட் ஈவினிங் துவா… சோ… கிஸித்துமஸ் லீவ் என்ன ப்ளான் செஞ்சிருக்கீங்க?", என உற்சாகத்துடன் கேட்டார்."நத்திங் யெட்….", தோளைக் குலுக்கியபடிக் கூறினாள்."என் ஃபேமிலி கூட டின்னர் ஒரு நாள் ஜாயின் பண்ண முடியுமா?""கண்டிப்பா… வித் ப்ளஷர்… ""ஓக்கே… 25ம் தேதி என் வீட்ல தான் டின்னர் உங்களுக்கு…. இன்னும் சில ...

அந்தர பயணம்

செயற்கையான இயற்கை வேண்டாம்....நூதனமான தடங்கள் வேண்டாம்.....அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்...பழைய நான் வேண்டவே வேண்டாம்.....புதிய நான் முற்றிலும் வேண்டாம்....நிஜமான "நான்" யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது....இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்..... ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்....!!!- ஆலோன் மகரி

உணர்வேனா?

இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்...குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது...மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்....இருதுருவ உணர்வுகள்....சட்டென உணர்வில்லா வெறுமைகள்....இதுவா? அதுவா? எதுவோ? நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை... காரணம்...இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை....ஒன்றுமே இல்லை.....இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது....என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது...உணர்வேனா???- ஆலோன் மகரி

பிரதிபலிப்பு

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பு.... உன் ஆசைகளின் பிரதிபலிப்பு.... உனது பிரதிபலிப்பு.... நள்ளிரவில் உலகம் உறங்கும் சமயத்தில்.... உன் எழுத்து என்பது..... நீ தான்..... நீ மட்டும் தான்..... - ஆலோன் மகரி

24 – மீள்நுழை நெஞ்சே

24 - மீள்நுழை நெஞ்சே ஓயாமல் அடிக்கும் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும் கனிமொழி சரமாரியாக அவளை வசைப்பாடத் தொடங்கினாள். "எங்க டி போய் தொலைஞ்சு? எத்தனை மணி நேரமா உனக்கு போன் பண்றேன்… என்ன கிழிச்சிட்டு இருந்த இவ்ளோ நேரம்? பேயே …பிசாசே…. எருமையே…. ", இப்படி அவள் அங்கே கத்திக்கொண்டிருக்க இவள் போனை கையில் ஆட்டியபடி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். பத்து நிமிடம் முடிந்த ...

மிச்சம்

அமர்ந்தே இருக்கிறேன்.... ஒற்றைக்கால் திடத்தில்.... மூன்று கால்கள் சமாளித்திருக்கும் இருக்கையின் மேல்... ஓடத் தொடங்கும் முன் நின்ற ஓட்டம்.... கீற்றாக நினைத்த வெளிச்சம்.... கைப்பிடித்து அழைத்துச் சென்று சூன்யத்தில் தள்ளிவிட்டது.... சூன்யமென்றால் வெறிக்க வேண்டுமா? மாட்டேன்.... அனைவரும் செய்வதைச் செய்யமாட்டேன்.... சூன்யத்தைச் சுற்றி வர ஆசைப்பட்டேன்... சூன்யத்தில் தானே பிரபஞ்சம் உருவானது.... வெற்றிடத்தில் தானே அனைத்தும் மிதக்கிறது...?! வெற்றிடம்..... வெறுமையான இடம் அல்லவா? இதை வெற்றியின் இடம் என்றும் கூட ...

போதும் …

காதல் வேண்டாம் .. கல்யாணம் வேண்டாம் .. சடங்குகள் வேண்டாம் ..  - அதில் வரும் சந்தோஷம் வேண்டாம் .. நான் வேண்டும் .. என்னை நான் மீட்டெடுக்க வேண்டும் .. யாரும் இல்லா வாழ்வில் .. - எனக்கு நான் போதும் .. - எனையன்றிஎன்னை அதிகமாக நேசிப்பவர் யார் ??? - ஆலோன் மகரி 

திரும்பி விடாதே

நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது போல ... என் நினைவுகளையும் தொலைத்து போ ... காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை ... மறந்தும் சுவாசித்திடாதே ... பாவம் .. நான் தான் .. அது என்னைக் காட்டிவிட்டால் ... - மீண்டும் நான் நொறுங்கிப் போகக் கூடும் ... !!!  - ஆலோன் மகரி 

Page 3 of 8 1 2 3 4 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!