Tag: சுயம்

என்ன அது ?

என்னுடன் நான் உரையாடும் வேளையில் .. கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. - ஏனோ திரை ஒன்று தடுத்து நிற்கிறது .. மனசாட்சி என்ற ஒன்று .. - நான் அதுவாகவோ ? அது நானாகவோ ?!எதுபோல் ஆனாலும் உண்மையை உரைத்திட வேண்டும் .. ஆரம்பத்தில் ஆடிய கபடி இன்றில்லை .. எனை நான் பார்க்க நினைக்கும் நொடி .. எத்திரையும் என் மனத்திரையை மறைப்பதில்லை .. வேறொரு திரை என்னை மறைப்பதை காண்கிறேன் .. என்ன அது ???  - ஆலோன் ...

நிதர்சனம்

பற்பல கற்பனையில் ஒன்றாய் .. இன்று அமைய ஆசை .. நினைக்காதது நடப்பதே நிதர்சனம் என்று உணர்த்திவிட்டாய் ..!!!  - ஆலோன் மகரி 

நொடி

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி 

தனிமை

மனிதனின் தனிமையை விட .. மனதின் தனிமை .. சில சமயங்களில் .. - மனிதனை நிலை குலையச் செய்கிறது ..!!!  - ஆலோன் மகரி 

என் வழி..

என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் .. முகமறியா நட்பும் .. முகமறிந்த மோதலும் .. காதலில் தோல்வியும் .. மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் .. விடையறியா கேள்விகள் .. கேள்விகள் இல்லா விடைகள் .. எனக்கும் உனக்கும் இடையே .. தடுமாறும் மனிதர்கள் !! சொல்வது தத்துவமல்ல .. சொல்லாதிருந்தால் தவறும் அல்ல .. ஆயினும், சிறு சிறு மௌனங்கள் .. சில ...

இருதலைக்கொள்ளி

சொல்ல ஏதும் இல்லை .. ஏதோ மனதை கவர்கிறது .. விரக்தியும், ஆர்வமும் .. மாறி மாறி ஆள்கிறது என்னை ..!! புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது .. மறந்து விட ஆர்வம் மறுக்கிறது .. இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் .. எதை நாடி போவேனோ இறுதியில் ..??? - ஆலோன் மகரி 

அழை

கனவில் வாழ்கிறேன் .. நித்தம் உன்னை காண்கிறேன் .. பதில் கூறா கேள்விகள் .. ஓடும் யுகங்கள் .. காண்பவை யாவிலும் விரக்தி .. விரயமாகும் காலங்கள் .. ஒளிக்காட்டி ஓடி மறையாது .. வழிக்காட்டி அழைத்து செல் .. !!!  - ஆலோன் மகரி 

நான் வாழ….

ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் ... ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் ...சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ....கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் .....ஹாஹா ....சொற்களும் கோர்வையில்லை ...‌மனமும் நிலையில் இல்லை ....காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ....எனக்கான நாட்களை நான் வாழ .... - ஆலோன் மகரி

திருப்தி

கனவிலும் கற்பனையிலும் ...வாழும் வாழ்வை ...நிஜத்தில் சுவாசிக்கவே விழைகிறேன் ...ஆனதொரு வாழ்வமைந்தால் ... ஆத்ம திருப்தியடைவேனோ..... ???!!! - ஆலோன் மகரி 

இறுதியில் உறுதியாக

காதல் பொய்த்து போனது …..வாழ்க்கை பொய்த்து போனது ….நம்பிக்கை பொய்த்து போனது …உறவுகள் பொய்த்து போனது ….உறுதியாக நினைத்த சில நட்பும் …இறுதியாக பொய்த்து போனது …உள்ளிருந்து வெளிப்பட்ட சிரிப்பு …அதன் காரணம் அறியேன் …நிற்காமல் வரும் சிரிப்பை நிறுத்தவும் விழையேன் ….மூடனாக இருந்திருந்தால் சிறுஅமைதி கிட்டியிருக்கும் …கண்மூடித்தனமான மூடனாய் கடந்துவிட்டேன் இத்தனை காலமும் … - நான்தனித்திருப்பது புதிதல்ல ….குழுவாய் இருந்தபோதும் தனித்தே இருந்திருக்கிறேன் ….மகாதேவா …..நீயின்றி எவரும் ...

Page 4 of 8 1 3 4 5 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!