Tag: சுயம்

வலி

தடம் மாறிப் போக நினைத்தது இல்லை ......வாழ்வின் அரவனைப்பில் .... - திடம்குறையாது ஓடுகிறேன் ....வலியனைத்தும் வலிமையாக ......எதிர்கொள்ள காத்திருக்கிறேன் .....எதிர்வரும் வலிகளுக்காக ..... - ஆலோன் மகரி 

காணவில்லை…

தொலைந்து கொண்டிருக்கின்றன நொடிகள் ...தொலைகிறதென எப்படி உணர்ந்தாய் ?எனக்காய் கழியவில்லை ....அது தான் காரணமா ?என் பிடித்தங்களிலும் கழியவில்லை ...அவ்வளவு தானா ?கழியும் நொடிகளில் என்னை காணவில்லை ...உன்னையா ?ஆம் ....தொலையும் நொடிகளில் எள்ளளவும் என் மனம் லயிக்கவில்லை ....பிறகு..... ? !என்னையும் காணவில்லை ...எனக்கான க(ன)ணங்களும் காணவில்லை .... - ஆலோன் மகரி

எதுவோ… நானோ….

வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ....இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் ...வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது ...மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது ...அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ....பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் ...அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது ...இந்நிலை தொடர்வதன் காரணம் அறியேன் ....எதுவோ ...எதுவாகவோ ....மனமோ ... நானோ ....பரிணாமம் கொள்ள போகிறது .... - ஆலோன் ...

நிலை கொள்ளா ஆன்மா

மனதில் ஆடும் சொற்கள்..... ஊசலாடும் உணர்வுகள்..... வருணனின் வருடல்கள்.... காலதேவனின் ஒளடதங்கள்.... இவற்றுக்கிடையில்....... நிலைகொள்ளா ஆன்மாவாக நான்.... - ஆலோன் மகரி

நீ யார்?

கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி 

மீண்டும் ஓர் அத்தியாயம்

கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி

மாற்றம்

கடக்கின்ற நொடிகள்........நீளமாவதை உணர்கிறேன்.... - இன்னும்கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்....கொள்ளும் உணர்வினை கொல்லவா?காரணமில்லா கோபங்கள்.....அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்......விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்....வேண்டும் என யாசிக்கவில்லை....வேண்டாமென தூற்றவும் இல்லை....ஏனோ என் மனநிலையில் மாற்றம்...மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?மாற்றமே குழப்பமா ???!!! - ஆலோன் மகரி

மனம்

கருவிழியில் தோன்றியது காதல்.....!இன்னதென்று அறியாமலே வளர்கிறது.....!நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்.....இரண்டும் வேறல்ல – ஆனால்இரண்டும் ஒன்றல்ல......இதன் பிரிவினை தெரியாமல்...திண்டாடுகிறது மனம்.....மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்........... - ஆலோன் மகரி

22 – மீள்நுழை நெஞ்சே

22 - மீள்நுழை நெஞ்சே மாலை வரை நடந்தபடியே ஊர் சுற்றிய வில்சனும் துவாரகாவும், மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர்."என்ன சொல்லு வில்ஸ்… உங்க ஊரு கழுவி வச்ச மாதிரி நல்லா சுத்தமா தான் இருக்கு… இந்த மெட்ரோ ஸ்டேஷன் பாக்கவே சூப்பரா இருக்கு…", என ஸ்டேஷனை சுற்றிலும் கண்களை ஓட்டியபடிக் கூறினாள். வில்சன் இருவருக்கும் டிக்கெட் எடுப்பதை அவளும் அறிந்துக் கொள்ளக் கூறி அருகில் நிற்கவைத்து விவரம் கூறினான்‌. "உங்க ஊர்ல மெட்ரோ இல்லையா?", வில்சன் ...

21 – மீள்நுழை நெஞ்சே

21 - மீள்நுழை நெஞ்சே "வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?", எனத் துவாரகா வியந்தபடிக் கேட்டாள். "அவனுக்கு சுத்தமா இல்லைன்னா அவ்வளவு தான். ஓசிடி இருக்கு…. சோ ரொம்பவே சுத்தம் பாப்பான்…", இனியா சிரிப்புடன் கூறினாள். "அப்ப என் வீட்ட நீ தான் க்ளீன் பண்ணுவ வில்ஸ்", எனத் துவாரகா சிரிப்புடன் கூறினாள். "நீ இப்படி கனவு காணு அவன் ...

Page 5 of 8 1 4 5 6 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!