38 – ருத்ராதித்யன்
38 - ருத்ராதித்யன் காசியின் நான்கடி வீதிகளில் நுழைந்து ரன்வீர் மானசரோவர் படித்துறைக்கு அருகில் வந்தான். அந்த குறுகலான சந்தில் இரண்டு சக்கர வாகனங்களின் நெரிசல் தான் பெரும் தலைவலியாக இருந்தது. இதிலும் வண்டியில் மூட்டைகளை கட்டிக்கொண்டு மக்கள் சென்று கொண்டிருந்தனர்.நடப்பவர்களுக்கே எதிரெதிர் ஆட்கள் வந்தால் ஒருவர் நின்றால் தான் மற்றவர் செல்லமுடியும். இதிலும் வண்டியை ஓட்டுபவர்கள் திறமைசாலிகள் தான் அதுவும் காலை கீழே ஊன்றாமல். மானசரோவர் படித்துறையில் இறங்கி கங்கையின் பிரவாகத்தை கண்களில் ...