Tag: poem

மௌன மொழி

அவளின் குரல் ஓசை எழுப்பவில்லை…அவளின் மனம் பெரும் ஓசையுடன் ஒலிக்கிறது…..யாரும் இல்லா தனிமையில்….நிச்சயம் வெறுமை இல்லை…மனதில் பல நூறு அல்ல.. ஒரே எண்ணம் தான்…வாழ்வின் பாதை எதை நோக்கி?கூறும் அளவு சந்தோஷம் இல்லை…சொல்ல முடியா அளவு வேதனை உள்ளது….பேசும் அளவு வரிகள் இல்லை…பேசாத பல கனவுகள் உண்டு…மாறாத ஆசைகள் உண்டு….மாறிய தடங்களும் உண்டு…இயலாத செய்கைகள் இல்லை….முயற்சியை தடுக்கும் பெருஞ்சுவர் உண்டு….காணுதற்கரிய காட்சிகள் பல கண்டும்….சராசரி நிகழ்வுகள் இயற்றப்படவில்லை….வாய் மூடாமல் வாயடித்தவள்…இன்று மௌனியாகிட ...

என் கைப்பேசி

தினம் தினம் பயந்தது.....உயிர் வர போகவென இருந்தது.....எனை விட்டு போனாயே....சென்ற உயிர் திரும்பவில்லை...நிரந்தர உறக்கத்தில்.....என் கைபேசி.... - ஆலோன் மகரி

வெற்றியின் அணைப்பு

கரைகளில் நின்று  இரசிக்க வரவில்லை உன்னை…..காணாத காட்சிகள் காண விழைகிறேன்கணை கொண்டு துளைத்தாலும்….அலைக்கொண்டு தடுத்தாலும்… - என்அடி வைக்கும் முத்திரைகளை மறைக்கமுடியாது…. மறுக்கவும் முடியாது…உன்னோடான என் போராட்டம் ….அஸ்தமனத்திலும் தொடரும்….எப்போராட்டமானாலும் தாக்கவும்வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!! - ஆலோன் மகரி

மௌனம்

மௌனம்.....இன்று அதிகம் ஆட்கொள்ள எண்ணுகிறேன்..மடைதிறந்த வெள்ளமாக இருந்த நான்...அணை கட்டிய நீராய் தேங்கி நிற்பதேனோ?பின் சென்று என்னை இழந்தேனா?முன்னே பாய பதுங்கி வாழ்கிறேனா?இந்நிலை புரிந்தும் புரியா சூழ்நிலையாக...வலையில் சிக்கி சிக்காமல் நான்.... - ஆலோன் மகரி

காதல்

காற்றினில் மிதந்து வரும் காதல் நீ !உன் காதலை ஏற்று வாழும் சுவாசம் நான்!சுவாசம் முழுதும் உன் காதலே !காதலின் வடிவில் இதயம் உருவானதே !உருவான இதயமதில் நீ இருந்தாய்!இருந்தபோது இல்லாத காதல் - நான்இறந்தபோது பிறந்தது ஏனடி ?????! - ஆலோன் மகரி

ஏதோவொரு வலியின் தாக்கம்..

காணாத கண்களும் தான்... - உன்குரல் கேட்டு உயிர்க்கிறது....வேண்டாத வார்த்தைகளை தான் - நீகொட்டிய பின்னும் எண்ணுகிறது....உன்மீது கொண்ட காதல் மடியாது..ஆனால்...வீசிய வார்த்தையில் உதிர்ந்து போனது...பரவாயில்லை....நான் மடியமாட்டேன்...மீண்டும்..... -  உன்குரலுக்கு திரும்பவும் மாட்டேன்...சுகமாய் வாழ்ந்திரு... - என்சுகத்தினை உறிஞ்சிடாத தூரத்தில்... - ஆலோன் மகரி

மெய் மறந்தேன்

நிறைய சொல்ல ஆசை... - நிறையவே .....!!!!கொஞ்சம் கெஞ்ச ஆசை.... - கொஞ்சமாகவே ...!!உன்னை நிறையவே ரசிக்க ஆசை ...ஆனாலும் ... மெய்மறந்து எனையே மறந்தேன் உன் விழிகளில்..... - ஆலோன் மகரி

பொக்கிஷம்

வானவில் வளைவில்குழுமிய நிறங்களாய்ஜொலிக்கும் வைரங்களை கண்டெடுத்தேன்..உரமேறிய வைரங்களுள் …..உரமேறும் வைரமாய் மாறினேன்….. - என்பொக்கிஷ பெண்களின் பொக்கிஷத்தில் ... - ஆலோன் மகரி

உன்னுடன்

இரவும் பகலும்.....காடும் நாடும்....ஒளியும் இருளும்....காலையும் மாலையும்....நிலவும் சூரியனும்....பாட்டும் இசையும்...அழகும் அறிவும் - என்னிடம்இருப்பதை உன்னுடன் உணர்கிறேன்..... - ஆலோன் மகரி

கண்டுகொண்டான்

காற்றாட கைவீசி…. - உன்கைகளுக்குள் சிறைப்பட்டு…உன் தோள் சாய்ந்து….காது மடல்கள் சூடேற்றி….கன்னங்களில் உதடுகள் உரசி…அலைகளில் கால் நனைத்து….ஆடைகளில் நீர் அடித்து….அங்கங்களை தெளிந்தும் தெளியாது காட்டி…காதலில் காமம் தலைதூக்க…..என்னிலோ நாணம் கூர்பார்க்க ….உன் விழி போகும் வழி கண்டு…என் இதயம் படபடக்க…கலவையாய் பல உணர்வுகள்…. - ஆனால்உன் பார்வை உணர்ச்சியை தூண்ட…..நகர்ந்து நடந்தேன்… - என்இடை பற்றி நெருங்கி வந்தாய்….சுற்றிலும் பார்வை நான் பார்க்க…நீ என்னையே ஆழமாய் பார்த்தாய்….அடிவாரம் தொட்டு கண்டு ...

Page 7 of 9 1 6 7 8 9

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!