27 – வலுசாறு இடையினில்
27 - வலுசாறு இடையினில் அங்கிருந்து தப்பிய இருவரையும் நான்கு பேர் பின் தொடர்ந்தனர். அவர்களுடன் இளவேணியும், செங்கல்வராயனும் இருந்தனர்.“சீக்கிரம் போ .. அவனுங்க நம்மகிட்ட இருந்து தப்பிக்க கூடாது..”, என இளவவேணி அவசரப்படுத்தினாள்.“பிடிச்சிடலாம் வேணி.. நீ டென்ஷன் ஆகாத”, என செங்கல்வராயன் அவளைச் சமாதானம் செய்தபடி, அவர்கள் செல்லும் திசையை அனுமானிக்க முயன்றார்.“இது வர்மன் குலதெய்வ கோவிலுக்கு போற வழியாச்சே .. இந்த பக்கம் இவனுங்க ஏன் போகணும்?”, எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் செங்கல்.“வர்மன் கோவிலா? சீக்கிரம் அவனுங்கள பிடி.. அவனுங்க வர்மன் கிட்ட மட்டும் போகவே...



