காணவில்லை…
தொலைந்து கொண்டிருக்கின்றன நொடிகள் ...தொலைகிறதென எப்படி உணர்ந்தாய் ?எனக்காய் கழியவில்லை ....அது தான் காரணமா ?என் பிடித்தங்களிலும் கழியவில்லை ...அவ்வளவு தானா ?கழியும் நொடிகளில் என்னை காணவில்லை ...உன்னையா ?ஆம் ....தொலையும் நொடிகளில் எள்ளளவும் என் மனம் லயிக்கவில்லை ....பிறகு..... ? !என்னையும் காணவில்லை ...எனக்கான க(ன)ணங்களும் காணவில்லை .... - ஆலோன் மகரி





