19 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக்  கவனியாமல் கண்மூடி அர்த்த - சயனநிலையில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், "ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க", எனக் கூறியபடி அவள் எதிரில் அமர்ந்தார். தமிழோவியன் மென்னகைப்  புரிந்துவிட்டு,  "பாலா…. செல்லம்மா …", என இருவரையும் அழைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்துக்  கொடுத்தார். தந்தை அழைத்ததும் கண்விழித்தவள் எதிரில் இருப்பவரைக் கண்டு எழுந்து நின்றாள். பாலாவும் வல்லகியும் அவரை மரியாதை நிமித்தமாக வரவேற்றனர்....

18 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

18 - காற்றின் நுண்ணுறவு நாக் அவசர அவசரமாக மரத்தில் தாவி ஏறி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டிருந்தான். ரிஷி கொடுத்த சத்தம் அந்த பழங்குடி கிராமத்தில் இருந்தவன் காதுகளில் விழுந்ததும், பதற்றமாகவும் ஜாக்கிரதையாகவும் அடர்ந்த மரங்களுக்கிடையில் தாவிச் சென்றவன், அந்த டென்ட்களில் இருந்து ஆட்களைனைவரையும்  இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்தது, இவன் கண்களில் விழுந்தது. இளவெழிலி வெளியே வரமுடியாதென தர்க்கம் செய்துக்கொண்டிருக்க, வேறொருவன் வந்து அவளை ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து  இரத்தம் வழிந்தது. "எங்களால எங்கயும் வரமுடியாது…. நாங்க இங்கயே தான் இருப்போம். எவனா இருந்தாலும் அவன இங்க வரசொல்லு…. எங்க...

17 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

17 - காற்றின் நுண்ணுறவு காரில் ஒளிந்திருந்த நாச்சியாரும் ராகவியும் புதிதாய் வந்தவனைப் பார்த்தனர். அங்கிருந்து தப்ப முடியுமா என்பது தான் நாச்சியாரின் அதிகபட்ச சிந்தனையாக இருந்தது. ம்ரிதுள்…. அதித் ஓவிஸ்கரின் தம்பி. தன் தந்தையின் மற்றொரு  மனைவியின் மைந்தன். அவன் தலைமையில் அமர்ந்து போடும் திட்டங்களை, களத்தில் இறங்கி கூலியாட்களுடன் கலந்து வேலை செய்பவன். இவன் தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ள முனைந்ததும் இல்லை. இவனது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆதலால் தமிழ் ஆண்மகனாகவே வளர்ந்து பல கலைகள் கற்றவன். ஆனால் அவன் பெயரின் அர்த்தத்திற்கு நியாயம் செய்யாது வாழ்ந்து வருகிறான்."வாங்க ம்ரிதுள்…. அதித் பாஸ் வருவாருன்னு...

16 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

16 - காற்றின் நுண்ணுறவு மெல்ல வல்லகி மனதில் நடந்ததை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, பாலா சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்துக்கொண்டிருந்தாள். பஸ்ஸில் ஏறிய உடன் தூங்கியிருந்தாலும் இடையில் கண்விழித்தபோது அவர்களை யாரோ கண்காணிப்பது போல ஒரு உணர்வு தோன்ற தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து நான்கு சீட் பின்னே அமர்ந்திருந்தவனின் பார்வை இவர்களிடமே நிலைத்திருந்தது. நடுஇரவில் அவன் உறங்காமல் தங்களையே பார்ப்பதை உணர்ந்தவள் அப்போதிருந்து உறங்காமல் மற்ற யாரேனும் தங்களை கண்காணிக்கிறார்களா என சுற்றிலும் பார்வையை விட்டாள். அவன் அவ்வப்போது எதையோ போனில் டைப் செய்வது கண்டு சந்தேகம் கூடியதால் நித்திரையை துரத்திவிட்டு...

வினோலியா

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினோலியா பர்னாந்து 2. படிப்பு – பள்ளி படிப்பு மட்டுமே 3. தொழில் / வேலை - உதவி கணக்காளர் 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  ம்ம்ம்…  7ம் வகுப்பு படிக்கும் போது ஆனால் திருமதி ரமணிசந்திரன் அவர்களின் புத்தகம் ஒன்று பக்கத்து வீட்டு அக்காவிடம் இருந்து வாங்கி படித்தது, ஆனால் வாசித்து முடிக்க கிடைக்கவில்லை.. கதையின் பெயரும் தெரியாது…. பள்ளிக்காலம் முடிந்ததும் அக்கதையை தேடி தேடியே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன் இன்றுவரை தொடர்கிறது 😍 5. எந்த மாதிரியான சூழ்நிலையில்...

15 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

15 - காற்றின் நுண்ணுறவு அருகில் இருந்த காரிடாரில் அமர்ந்திருந்தவன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கிருந்து நகர்ந்து வல்லகி இருந்த அறையை பார்வைப்  பார்த்தபடிச் சென்று வந்தான். மீண்டும் மயங்கியவள், நான்கு மணிநேரம் கழித்து வல்லகி கண் முழித்துப் பார்த்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி அவள் முகத்தில் தெரிந்தது. பார்வையும் தீராத தேடலோடு தென்பட்டது. பாலா அவசரமாக ஓடி வந்து கட்டிக்கொண்டாள். யாழினியன் முகுந்தனுக்கு சைகை காட்டிவிட்டு உள்ளே சென்றான்."வகி…. வகி…. எப்படி இருக்க? இப்ப எப்படி இருக்கு? இன்னும் உடம்பு வலிக்குதா? ", அவளை கண்களால் அளந்தபடிக் கேட்டாள். "நல்லா இருக்கேன் பாலா…....

14 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு உள்ள வாங்க…. பாலா… கொஞ்சம் தண்ணி வேணும். சாப்பிட எதாவது இருக்கா?", என தலையை உலுக்கி எதையோ நியாபகப்படுத்த முயன்றபடி நடந்தாள். யாழினியன் அடிபட்டு கிடந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு, தன் அசிஸ்டெண்ட் முகுந்தனுக்கு அழைத்து விவரம் கூறி வரச்சொன்னான்."இந்தா வகி… சாப்பிடு…. ", என அவள் சாப்பிட உணவை கொடுத்தவள் அவள் முகத்தை பார்த்தபடி அப்படியே நின்றாள். முதலில் தண்ணீர் தொண்டையில்...

13 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

13 - காற்றின் நுண்ணுறவு இங்கே ஆந்திரா பாரஸ்ட் ஆபீசர்கள் உதவியுடன் தர்மனும் இனியனும் தன் ஆட்களுடன் சென்னை வந்து சேர்ந்தனர். பழங்குடி மக்களுக்கு பல முறை நன்றி உரைத்துவிட்டு, வல்லகியை தர்மன் தூக்கிக் கொள்ள, அவள் அருகில் இருந்த செடிகளை இனியன் தூக்கிக்கொண்டு தனி வாகனத்தில் அவளை ஏற்றிக் கொண்டனர். அடுத்த நாள் காலை சென்னையை அடைந்ததும் வழுதி தர்மனை அழைத்தான். "தர்மா…. எங்க இருக்க? சீக்கிரம் நம்ம ஆபீஸ் வா….", என இறுக்கமாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். வழுதியின் குரலில் இருந்த இறுக்கம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது. "இனியன்…. என் சீப் கூப்பிடறாரு. நான் உடனே...

12 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

12 - காற்றின் நுண்ணுறவு குழியில் புதைக்கப்பட்ட வல்லகி மெல்ல சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியபடி சுயநினைவின்றிக் கிடந்தாள். அவள் உடலில் பல மாற்றங்கள் குழியில் புதைத்த நொடிகளில் ஆரம்பித்து வேகமாக நடந்தேறிக்கொண்டிருந்தது. சுவாசக்குழாயுடன் மூளை நரம்பின் சில மர்ம முடிச்சுகள் கோர்க்கப்பட்டது. அந்த சமயங்களில் அவளது சுவாசமானது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தான் சுழற்சிக் கொண்டது. உள்ளிழுத்த காற்று அவள் உடல் முழுதும் சுற்றிய பின் மூளையும், கண்ணும், இதயமும் இணையும் மர்ம புள்ளியில் நின்று தனது நடனத்தை தொடங்கியது என்றே கூறவேண்டும். காற்று அவளின் உடலுக்குள்ளே புதுவிதமாக  மெல்ல மெல்ல உறவாடத் தொடங்கியது. சற்று நேரத்தில் ஆஞ்யாவிற்கு...

11 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

11 - காற்றின் நுண்ணுறவு தன் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி வந்துக் கொண்டிருந்த தர்மதீரனுக்கு, வல்லகியை யாரோ தூக்கிச்  சென்று விட்டதாக தகவல் வரவும் அவசர கதியில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். ஜிதேஷ் அடித்து தள்ளியதில் பாலாவிற்கு உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது. தலையிலும் அடிபட்டு வீக்கம் கொண்டிருந்தது. டாக்டர் அவளுக்கு முதலுதவி செய்தபடி அவளை அமைதிபடுத்த முயன்றுக் கொண்டிருந்தார். "ப்ளீஸ் பாலா… கொஞ்சம் சைலண்ட் ஆ இருங்க. போலீஸ் வந்துட்டு இருக்காங்க…. காயத்துக்கு மருந்து போடணும்…  கொஞ்சம் கோ-ஆப்ரேட்  பண்ணுங்க", டாக்டர். "அந்த தர்மதீரன வரசொல்லுங்க … அவரால தான் வகிக்கு இப்ப இவ்வளவு...

Page 38 of 58 1 37 38 39 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!