10 – மீள்நுழை நெஞ்சே

10 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது. “இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி. வன்சோகம் இழைந்த மென்னகை அவளிடம் இருந்து வெளிவந்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும்.. அங்கே நடக்கும் பிரச்சனைகளும், அங்கிருப்பவர்களின் எண்ணமும். அதில் சிறிது தனக்கு ஆசுவாசம் கொடுக்க எண்ணும் ஜீவன்கள்  தனது பெற்றவர்கள் தான். ஆனால் அவர்களையும் சூழ்நிலைக்...

9  – மீள்நுழை நெஞ்சே

9 - மீள்நுழை நெஞ்சே  “வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான். மதியூரன் .. அந்த கம்பெனி எம்.டி .. “குட் மார்னிங்..““குட் மார்னிங்”, என துவாரகாவும், அதிதியும் எழுந்து நின்றனர். “ப்ளீஸ் உக்காருங்க.. “, என மெலிதான முறுவலுடன் கூறிவிட்டு அதிதியைப் பார்த்தான். “இவங்க துவாரகா மதி.. நேத்து நமக்கு வந்த மெயில்ல சொல்லி இருந்தாங்களே .. “, என விவரம் கூறினாள். “ஹோ .. ஓகே.. வெல்கம் துவாரகா.. இந்த ப்ராஜக்ட் தனிப்பட்ட முறைல நான் தான் லீட் பண்ணிட்டு இருக்கேன். உங்களுக்கு மொத்த...

8 – மீள்நுழை நெஞ்சே

8 - மீள்நுழை நெஞ்சே  நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.நீர் வளம் நன்றாக இருப்பதனால் விவசாயமும் அங்கே நன்றாக இருந்தது. இப்போது நகரமாக மாறியதால் நகரத்தைச் சுற்றி உள்ள ஊர்களில் ஓரளவு விவசாயம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.ஆனாலும் அந்த மண் அவளை ஏதோ செய்தது. மரத்து...

7 – மீள்நுழை நெஞ்சே 

7 - மீள்நுழை நெஞ்சே  “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்ட .. நில்லு..”, என அவளையும் அவர்கள் அருகில் நிற்க வைத்து நான்கு பேருக்கும் ஆரத்தி எடுக்கக் கூறினார். “வசந்தி .. நீ வாசல்ல கொட்டிட்டு வா.. நான் அவங்களுக்கு ஜூஸ் எடுத்து...

6 – மீள்நுழை நெஞ்சே

6 - மீள்நுழை நெஞ்சே  “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் இங்க பக்கத்துல உக்காந்தா உருகிடுவியா?”, என குதர்க்கமான சொற்கள் அவன் வாயில் இருந்து வெளியே கோபத்துடன் விழுந்தது. அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி அருகில் அமர்ந்தாள். “உன் தம்பிகிட்ட என்ன பேசிட்டு இருந்த?”“நான் எப்பவும் போல சகஜமா தான் பேசிட்டு இருந்தேன்.. ஏன்?”“எவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?”“அரை மணிநேரம் இருக்கும்”, ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள். “ஒரு பையன்கிட்ட உனக்கு...

5 – மீள்நுழை நெஞ்சே 

5 - மீள்நுழை நெஞ்சே  "அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு தான் எடுத்திருப்ப""உங்க பொண்ணும் இப்படி செஞ்சிட்டு வந்தா நீங்க இதையே சொல்வீங்களா ஆண்ட்டி?"அன்பரசி அவளை ஏன் என்பது போல பார்க்கவும், "இல்ல நம்ம சொசைட்டில அடுத்தவங்களுக்குன்னா எல்லாத்தையும் சொல்றவங்க, தன் வீட்ல அப்படி நடக்கறப்ப, அதை ஏத்துக்க முடியாம பழைய முறைகள தான் கையில் எடுக்கறாங்க… அதான் அப்படி கேட்டேன்", எனக் கூறிவிட்டு அவர் முகத்தைப்  பார்த்தாள். "நீ சொல்றது சரி தான்....

4 – மீள்நுழை நெஞ்சே 

4 - மீள்நுழை நெஞ்சே  அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள். காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று உறங்க வைத்தது. அடுத்த நாள் காலை எழுந்துத் தயாராகி, ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள். "நர்ஸ்… அன்பரசி மேடம் இப்ப எப்படி இருக்காங்க?", நேற்றிரவு அவருடன் தங்கியவர் வாயிலுக்கு வரும் போது கண்டவள் அருகில் சென்றுக் கேட்டாள். "அதுக்குள்ள வந்துட்டீங்க…. அவங்க நல்லா இருக்காங்க. இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்… எனக்கு ட்யூட்டி முடிஞ்சது.. நான் வரேன்", எனச் சிரித்த முகத்துடன் கூறிவிட்டுச் சென்றார். "ஹலோ...

3 – மீள்நுழை நெஞ்சே

3 - மீள்நுழை நெஞ்சே  “என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. “2 இட்லி ““இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர். “சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள். “துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட ? ஒரு இயல்பான சிரிப்பு கூட ஏன் பெருசா தெரியுது ?” , அவள் மனதிடம் அவளே கேட்டுக் கொண்டாள். கடந்த பதினெட்டு மாதங்களாக அவள் கடந்து வந்த நிகழ்வுகளும், நினைவுகளும் அவளை இதுவரை பைத்தியமாக்காமல் இருப்பதே...

2 – மீள்நுழை நெஞ்சே

2 - மீள்நுழை நெஞ்சே  "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக்  கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப பேச முடியாம விலகி வந்துட்டேன்…..", எனக் கூறி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். "இப்பவும் நீ பேசணும்டா ராகா…. சொல்லப்போனா இனிமே தான் நீ பேசணும்", என அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினார். "என்னப்பா பேசறது? எனக்கு சொல்லி...

காற்றின் நுண்ணுறவு புத்தகம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..இது தான் பதிப்பகம் போட்ட முதல்  புத்தகம். இந்த கதை அழகிய சங்கமம் போட்டில , வித்தியாசமான கதை கரு பிரிவுல தேர்ந்து எடுக்க பட்ட கதை. ஸ்ரீகலா மேடம் தளத்துல போன தீபாவளில ஆரம்பிச்சி நாலு மாசம் நடந்த போட்டில நானும் கலந்துகிட்டேன்.பெருசா இந்த கதை எல்லாரையும் சென்று சேரல தான், ஆனா படிச்ச அத்தனை பேருக்கும் இதுல இருந்து ஏதோ ஒரு ஒரு விஷயம் பிடிச்சி இருந்ததுன்னு அவங்க குடுத்தா விமர்சனம் ல புரிஞ்சது. "காதல் இல்லாத கதை" இது தான்...

Page 47 of 58 1 46 47 48 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!