31 – அகரநதி

3 – அகரநதி

31 - அகரநதி சரணுக்கு போன் கால் வந்தததும் பதற்றமாய் மூவரும் கிளம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மதுரன் வரவேற்பறையில் நின்றிருந்தான். அவனைக் கண்ட நதியாள் யோசனையாக அகரனைப் பார்க்க , அகரன் சரணைப் பார்த்தான். "அவர் தான் கால் பண்ணாரு. அப்பாக்கு ஆக்சிடெண்ட்னு…", சரண் பதில் கொடுத்தபடி அவனருகில் சென்றான். "பெரியப்பாக்கா? என்னாச்சி?", நதியாள் பதறிப்போய் கேட்டாள். "ஆமா. சஞ்சய், மாமா ,அப்பா எல்லாரும் ரோட் ஓரமா நின்னுட்டு இருந்து இருக்காங்க. ஈ.சி.ஆர்ல ஏதோ ரேஸ் நடந்து இருக்கு. அப்ப ஒரு பைக் அப்பா மேல மோதிரிச்சாம். மதுரன் அங்க பக்கத்துல இருந்தப்ப...

30 – அகரநதி

3 – அகரநதி

30 - அகரநதி ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் மைரா இருக்கும் இடம் அறிந்து அங்கே சென்றனர். நதியாள் அகரனையும் சரணையும் கடந்து கோபத்தில் முன்னால் சென்றாள். அவள் வருவதை தன்னெதிரில் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு இருந்தான் மைராவுடன் அமர்ந்திருந்தவன். அவள் நடையின் வேகம், அவளின் வனப்பு என்று அனைத்தையும் தன் முன்னால் இருக்கும் கறி இரசத்தைக் குடித்தபடிக் கண்ணாடியில் இரசித்துக்கொண்டு இருந்தான். மைரா பேசுவதை காதில் வாங்காமல் நதியாளைக் கண்களால் களவாடியபடி இருந்தான் அவன். மைராவின் டேபில் அருகில் வந்தவள் சட்டென்று நின்று அகரனையும் சரணையும் முன்விட்டு பின்னே வந்தாள். அவர்களை முன்விட்டு வந்ததால் அவளும்...

29 – அகரநதி

3 – அகரநதி

29 - அகரநதி அகரன் வீட்டின் கதவை திறந்ததும், அந்த வீட்டை கண்டவள் அப்படியே ஒரு நொடி திகைத்து நின்று , ஊரில் இருக்கும் தன் அறைக்கு வந்து விட்டோமோ என்று தான் எண்ணினாள். அவள் அறைக்கும் இந்த வீட்டின் ஹாலிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்று தான் கூறவேண்டும். கூர்ந்து கவனித்தால் சிறிதாக ஒன்று இரண்டு பர்னிச்சர் மட்டுமே மாறுபட்டு இருப்பது தெரிந்தது. அத்தனை நேர்த்தியாக இருந்ததோடு, அவளின் அறை சுவற்களுக்கு பூசப்பட்டு இருக்கும் வர்ணம் கூட மாறவில்லை. "அகன்….. எப்படி இந்த ஹால் என் ரூம் மாதிரியே இருக்கு? ",...

28 – அகரநதி

3 – அகரநதி

28 - அகரநதி அகரனின் அறையில் அவனுக்கு முன் காத்திருந்த நதியாள், அவன் உள்ளே நுழையும் சமயம் சரியாக அவளின் போனில் அவனது புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். "ஏய் அகன்…. நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியா? என்னைய திருப்பி கேக்கற? உனக்கு அவ்வளவு தைரியம் வந்துரிச்சா ? இந்த நதி மேல பயம் இல்லாம போச்சி உனக்கு. இருடா உன்ன கல்யாணம் பண்ணி ஒரு வழி பண்றேன். அய்யோ அப்பா சாமின்னு நீ அலறிட்டு வந்து என்கிட்ட நான் கேள்வி கேட்டதும் பதில் சொல்லனும்……இல்லல்ல  இன்னும் நான் கேள்வி...

27 – அகரநதி

3 – அகரநதி

27 - அகரநதி வளர்பிறை நிலவை இரசித்தபடி நின்றிருந்த நதியாளை அகரன் கண்ணிலும் இதயத்திலும் நிறைத்துக் கொண்டான். முகில் மறைத்த நிலவின் ஒளியில் நதியாளும் அகரனும் காதல் சிற்பங்கள் ஊடலில் லயித்திருப்பதைப் போல நின்றிருந்தனர்.உண்மையில் ஊடல் தானோ இருவருக்கும்? "என்னாச்சி நதி? ஏன் அமைதியா இருக்க?", அகரன் நதியை தோள் திருப்பிக் கேட்டான். "என்னை கல்யாணம் பண்ணிக்கறியா அகன்?", நதியாள் அவனின் கண் பார்த்துக் கேட்டாள். அவளின் கேள்வி நிஜம் தானா? இல்லை கனவா? அகரன் திகைத்து அவளைப் பார்த்தான். "நான் நிஜமா தான் கேக்கறேன் அகன். என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?", நதியாள் அதே கேள்வியை மீண்டும் கேட்டாள். "ஏன் இந்த...

26 – அகரநதி

3 – அகரநதி

26 - அகரநதி அகரன் நதியாளிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தைப்  பார்த்துக்  கதவருகில் நின்ற உருவம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. நதியாள் கதவை நோக்கித்  திரும்பும் சமயம் தான், அந்த உருவத்தைக்  கவனித்தாள். சட்டென்று அகரனை திரும்பிப்  பார்க்க இன்னும் நதியாள் அப்படியே நிற்பதைக் கண்டு, அவனும் அவளை பார்த்துவிட்டு அவளின் பார்வைக்  கதவருகில் நிற்பதைக் கண்டு, அவனும் பார்க்க அந்த உருவத்தைக் கண்டான். "தாத்தா….. எப்ப வந்தீங்க?", அகரன் எழுந்து அவர் அருகில் சென்றான். அங்கே நின்றது வேரு யாரும் இல்லை நம் சுந்தரம் தாத்தா தான். வேறு ஒரு வேலையாக சென்னை வந்தவர்,...

25 – அகரநதி

3 – அகரநதி

25 - அகரநதி அகரன், நதியாள், சஞ்சய் மூவரும் அந்த ரெஸ்டாரெண்டின் உள்ளே நுழையும் சமயம் சக்ரதேவ்வும் , சரிதாவும் உள்ளிருந்து வெளியே வந்தனர்."ஹேய் அகர்...எப்படி டா இருக்க? ஹாய் நதியாள் எப்படி இருக்க?", சக்ரதேவ்."நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க? ஹலோ சிஸ்டர்", என அகரன் தேவ்விடம் பேசிவிட்டு சரிதாவிடம் நலம் விசாரித்தான்."சிஸ்டரா….. மிஸ்டர் நான் உங்களுக்கு சிஸ்டர் இல்லை. என்னை பேர் சொல்லி கூப்பிட்டா போதும்", சரிதா அவசரமாகக் கூறினாள்."இப்ப என்ன தப்பா சொல்லிட்டாங்க. ஏன் இவ்வளவு பதட்டம் மிஸ்.சரிதா? ஹாய் தேவ். நான் நல்லா இருக்கேன்....

24 – அகரநதி

3 – அகரநதி

24 - அகரநதி நதியாளின் வானரப்படை ஆபீஸ் திறக்கும் சமயமே வந்துக்  காத்திருந்தது. பின்ன நதி விட்ருவாளா? அத்தனை பேரையும் ஐஞ்சு மணிக்கே எழுப்பிவிட்டு ரெடியாக சொல்லி இழுத்துட்டு 8.00 மணிக்கு வந்துட்டாளே."அடியே இம்சைஅரசி… உனக்கே இது அடுக்குமா? 9.30மணிக்கு வரவேண்டிய ஆபீஸுக்கு 8 மணிக்கே இழுத்துட்டு வந்துட்ட. அந்த ஆயாவே இப்ப தான் கூட்டிட்டு இருக்கு. எங்களையும் இந்த வேலை பாக்க வைக்கதான் இப்பவே இழுத்துட்டு வந்தியா?", ஸ்டெல்லா பொறிந்துத் தள்ளினாள், அவளின் தூக்கத்தைக் கெடுத்தக்  காரணத்தால்."அந்த வேலைக்கும் குவாலிபிகேஷன் கேப்பாங்க ஸ்டெல் அது உனக்கு இல்லை. சோ அவ்வளவு...

23 – அகரநதி

3 – அகரநதி

23 - அகரநதி "ஹலோ… அகன் எப்படி இருக்க?", நதியாள்."ஹலோ…. ஹூ இஸ் திஸ்?", எதிர்முனையில்."இஸ் திஸ் அகரன்ஸ் போன்?", நதியாள் குழப்பத்துடன் கேட்டாள்."எஸ்… இட்ஸ் அகரன்ஸ் நம்பர். ஹூ ஆர் யூ?", எதிர்முனையில்."ஐ ம் நதியாள் . ஐ வான்ட் டூ ஸ்பீக் வித் அகரன். இஸ் ஹீ தேர்?". "யா….. ஒன் மினிட்...", என நதியாளிடம் கூறிவிட்டு," அகர் சம்படி கால்ஸ் யூ", என அகரனை அழைத்தது அந்த குரல்."தேங்க்யூ டியர்",எனக் கூறி அகரன் தன் மொபைலைப் பெற்றான்."ஹலோ", அகரன்."யார் அவ? உன் மொபைல் எடுக்கறா?", நதியாளின் குரலில் பொறாமை...

22 – அகரநதி

3 – அகரநதி

22 - அகரநதி அறையில் இருந்து வெளியே வந்த அகரனைக் கண்ட நதியாள் தன்னை மறந்து அவனை இரசிப்பதை முதல் முறையாக உணர்ந்தபடி அவனை ஆராய்கிறாள்.ஆறடிக்கும் அதிகமான உயரம், சற்றே அழுந்த கிள்ளினால் கூட சிவந்துவிடும் நிறம், ஆட்களை துளைத்தெடுக்கும் கண்கள், திடகாத்திரமான உடல், அகன்ற தோள்கள், நடந்து வரும் தோரணையில் நிச்சயம் அனைவரையும் கொள்ளை கொள்ளும் கள்வன் தான்.இத்தனை நாட்கள் பள்ளியில் இருந்த அகரனாக பார்த்தவள் இன்று முழு ஆண்மகனாக எதிரில் வருபவனைக் கண்களால் அளந்தபடி இரசித்துக்கொண்டு இருந்தாள்."வாங்க மாமா. வா நதிமா.. வாங்க எல்லாரும்", என அருகில் வந்து...

Page 51 of 58 1 50 51 52 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!