41 – அகரநதி
41 - அகரநதி அகரன் மற்றும் நதியாளின் திருமணம் ஊர்கூட்டி விருந்துக் கொடுத்து அறிவிக்க பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் துரிதகதியில் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. சரண் புதன்கிழமை காலையிலேயே மண்டபம் அலங்கரிக்க ஆட்களை அனுப்பிவிட்டான். அகரன் மற்றும் நதியாளின் விருப்பபடி மேடை அலங்காரம் முதல் மலர் மாலை, லைட்டிங், வரவேற்பு அலங்காரம் என அனைத்தும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. விருந்து முடிந்து கருப்பசாமிக்கு கெடாவெட்டுவதால் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் மண்டபத்தை எடுத்துக் கொண்டனர் மணமக்கள் வீட்டினர். புதன்கிழமை வருவதாக சொன்ன அகரன் வேலைக் காரணமாக வெள்ளிக்கிழமை தான் வீடு வந்து சேர்ந்தான். அகரன் ஊருக்கு...


