41 – அகரநதி

3 – அகரநதி

41 - அகரநதி அகரன் மற்றும் நதியாளின் திருமணம் ஊர்கூட்டி விருந்துக் கொடுத்து அறிவிக்க பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் துரிதகதியில் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. சரண் புதன்கிழமை காலையிலேயே மண்டபம் அலங்கரிக்க ஆட்களை அனுப்பிவிட்டான். அகரன் மற்றும் நதியாளின் விருப்பபடி மேடை அலங்காரம் முதல் மலர் மாலை, லைட்டிங், வரவேற்பு அலங்காரம் என அனைத்தும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. விருந்து முடிந்து கருப்பசாமிக்கு கெடாவெட்டுவதால் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் மண்டபத்தை எடுத்துக் கொண்டனர் மணமக்கள் வீட்டினர். புதன்கிழமை வருவதாக சொன்ன அகரன் வேலைக் காரணமாக வெள்ளிக்கிழமை தான் வீடு வந்து சேர்ந்தான். அகரன் ஊருக்கு...

40 – அகரநதி

3 – அகரநதி

40 - அகரநதி ஸ்டெல்லா மதுரன் இருவரும் தங்களின் காதலைப் பகிர்ந்த தருணத்தை இதமாக அனுபவித்து சந்தோஷித்துக்கொண்டிருந்தனர். மேலே வந்த தேவ் மீராவைத் தேட அவள் நதியாளின் அருகில் நின்றிருந்தாள். "யாள்….. மீராகிட்ட பேசணும்", தேவ் மீராவைப் பார்த்தபடி கூறினான். "மீரா….. போய் பேசிட்டு வா", நதியாள் அவளை அனுப்பி வைத்தாள். மாடிப்படியின் அருகில் நின்று தேவ் மீராவைப் படிகளில் அமரச் சொன்னான். "பரவால்ல….. ", என மறுத்து மறுபக்கம் நின்றாள் மீரா. "நான் பேசினத கேட்டிருப்ப மீரா. இருந்தாலும் நான் சொல்றேன். நான் உன்னை நேசிக்கறேன். உன்கூட தான் என் வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு நினைக்கறேன். உன் மனசுல இருக்கறத...

39 – அகரநதி

3 – அகரநதி

39 - அகரநதி நதியாள் மாடியில் இருந்து அகரனின் கைகளில் இருந்து விடுபட்டு சிரித்தபடி கீழே வர, அகரனும் மேல் இருந்தபடியே காற்றில் முத்தம் ஒன்றை அனுப்ப என்று இருவரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது. அகரனின் சரசத்தைக் கண்டு மதுரனும் தேவ்வும் மூக்கிலும் காதிலும் புகைவிட்டபடி அவனைக் கண்டு முறைத்தனர். "பாத்தியா தேவ். நம்மல கீழ அனுப்பிட்டு அவன் என்ன வேலை பண்றான்னு? இவனுக்கு மட்டும் எப்படி அமையுது? நம்ம ஆளுங்க கூட நம்மனால பேசக்கூட முடியல...இவன் ரொமான்ஸ் உள்ள பண்ணதும் இல்லாம நம்ம கண்முன்னாடி வேற ப்ளையிங் கிஸ் குடுக்கறான்", மதுரன் எரிச்சலுடன்...

38 – அகரநதி

3 – அகரநதி

38 - அகரநதி சரண், திலீப், சஞ்சய் மூவரும் சண்டைப் போட்டபடி இருக்க ஒரு பெண் அவர்களை அதட்டவும் மூவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.செந்தாமரை முகம், மைதீட்டிய விழிகள், அழகான நாசி, ஆரஞ்சு சுளைப் போன்ற அதரங்களில் லிப் க்ளாஸ் போட்டிருந்தாள், திருத்தப்பட்ட புருவம், புருவ மத்தியில் சிறிய கல்வைத்த பொட்டு, அதற்கு மேல் சிறு கீற்றாய் குங்குமம் ,முடியை லேயர் கட் செய்திருப்பாள் போல அடுக்கடுக்காக அலைபாய்ந்தபடி இருந்த கேசத்தை, கல் பதித்த சிறிய கிளிப் நடுவில் போட்டு கூந்தலை விரித்துவிட்டிருந்தாள். அளவான உயரம், சற்றே ஒல்லியான தேகத்தில் அவள்...

37 – அகரநதி

3 – அகரநதி

37 - அகரநதி தன் வீட்டு முற்றத்தில் அதிகாலை இளமஞ்சள் வெயிலில் நின்று  தலைமுடியை உலர்த்தியபடி நின்றிருந்த தன் மனைவியை, கண்களால் வருடியபடி அகரன் படிகளில் இறங்கி வந்தான். அஞ்சனம் தீட்டாத விழிகளும், நீர்துளிகள் ஆங்காங்கே கூந்தலில் அடர்காட்டில் மின்னும் வைரங்களாய், என்றும் இல்லாத புதுப்பொலிவை தான் கட்டிய புது பொன் மஞ்சள் தாலி கொடுக்க, பாந்தமான காட்டன் புடவையிலும் மகாலட்சுமி போல மென்முறுவலுடன் அருகில் இருந்தவர்களிடம் உரையாடிக்கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தவளை, கண் இமைக்காமல் சுற்றமும் உணராமல் பார்த்திருந்தவன் திடீரென அலற, அனைவரும் பதறியபடி அருகில் வந்தனர். "என்னாச்சி கண்ணு ? ஏன்...

36 – அகரநதி

3 – அகரநதி

36 - அகரநதி அகரனின் அறைக்குள் வந்த நதியாள் சகஜமாக உரையாட முயன்று அகரனின் கேள்வியில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அவன் கன்னத்தில் அறைந்தாள். கன்னத்தை தாங்கியபடி அகரன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். "என்ன கேட்ட? மறுபடியும் கேளு", நதியாள் அவனை கண்ணோடு கண்வைத்து மெதுவாக அதே சமயம் அழுத்தம் கொடுத்துக் கேட்டாள். அவன் அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். "கோவமா இருக்கியான்னு தானே கேட்ட?", நதியாள். ஆம் என தலையசைத்தான் அகரன். "நீ பண்ண வேலைக்கு உன்ன கொலை தான் பண்ணணும் …… உன்ன இதுவரைக்கும் உயிரோட விட்டு வச்சி இருக்கேன்ல …. இன்னும் என்ன என்ன...

35 – அகரநதி

3 – அகரநதி

35 - அகரநதி பஞ்சாயத்திற்கு அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். வினய் வன்மமும் கோபமும் பொங்க அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அகரனும் நதியாளும் அங்கிருந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருத்தது அவனுள் மேலும் வன்மத்தை சேர்க்க," நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடுவன்னு பாக்கறேன்", எனத் தனக்குள் கூறிக்கொண்டு, தூணில் சாய்ந்தபடி கைகட்டுகளையும் வெறுப்பாய் இறுக்கியபடி அமர்ந்திருந்தான். "ஹேய் யாள்….. இப்பவாது கொஞ்சம் அச்சம் மடம் நாணம்லாம் என்னனு தெரிஞ்சிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கப் பாரு", மீரா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த நதியாளை இழுத்து வைத்து ஒரு இடத்தில் உட்காரவைத்தபடிக் கூறினாள். "ஏன்?", நதியாள். "கல்யாணம் ஆகிரிச்சிரிச்சி டி. இனிமே...

34 – அகரநதி

3 – அகரநதி

34 - அகரநதி ஸ்வாமி சந்நிதியில் அதிர்ச்சியின் உச்சத்தில் அங்கிருந்த அனைவரும் நின்றிருக்க, அகரன் வினயை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தான். அவனின் மனதில் வினயைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் கொதித்துக்கொண்டு இருந்தது. மதுரனும் வினயைக் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். சரியான தருணத்தில் மதுரன் வினயை தடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் எவராலும் அந்த சம்பவத்தை ஜீரணிக்க முடிந்திருக்காது. வினய் கொண்டு வந்த தாலியை மதுரன் தடுக்க, ஸ்வாமி பாதத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட பொன்னாலான மாங்கல்யத்தை ஐயர் வெளியே கொண்டுவர, அதை அகரன் நொடியில் எடுத்து நதியாளின் கழுத்தில் அணிவித்திருந்தான். கணபொழுதிற்கும் குறுகிய நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில்...

33 – அகரநதி

3 – அகரநதி

33 - அகரநதி                                          நடு இரவில் ஊருக்கு வந்த அகரனும் சரணும் நேராக அகரனின் இல்லத்திற்கு வந்தனர். திலகவதி கதவைத் திறந்துவிட்டு அவர்களுக்கு சாப்பிட தோசையும் பாலும் கொடுத்தார். பின் இருவரையும் சீக்கிரம் காலையில் எழுந்துக் கொள்ளச்சொல்லிவிட்டு சென்று உறங்கி விட்டார். "டேய்…. என்னடா நடக்குது இங்க? எதுக்கு இப்ப என்னை அவசரமா ஊருக்கு கூட்டிட்டு வந்த? அம்மாவும் ஒன்னும் சொல்லாம போறாங்க", அகரன் சரணைக் கேட்டான். "பெருசா ஒன்னுமில்ல மச்சான். எல்லாம் காலைல பேசிக்கலாம். வா தூங்க போகலாம். இவ்வளவு தூரம் வண்டி ஓட்டிட்டு வந்தது எனக்கு டயர்டா இருக்கு", என சரண்...

32 – அகரநதி

3 – அகரநதி

32 - அகரநதி வீட்டில் கால் வைக்கும் சமயம் ஸ்டெல்லா யாரையோ கெட்அவுட் என கத்தியது தான் அனைவரின் செவிகளிலும் விழுந்தது. யாரிடம் அவள் இப்படிக்  கத்திக்கொண்டு இருக்கிறாள் என்கிற யோசனையுடன் முதலில் சரண் தான் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து அகரனும் சிதம்பரமும் உள்ளே வந்தனர். நதியாளும் சஞ்சயும் பரமசிவத்தைக்  கைத்தாங்கலாகப்  பிடித்தபடி மெல்ல உள்ளே வந்தனர். அங்கே சரிதா வினயின் பின்னே நின்றபடி ஸ்டெல்லாவை முறைத்துக்கொண்டு இருந்தாள். சக்ரதேவும் மீராவும் சங்கடமாக நெளிந்தபடி நின்றிருக்க, திலீப் ஸ்டெல்லாவை அமைதிப்படுத்திக்கொண்டு இருந்தான். "ஸ்டெல்…. கொஞ்சம் அமைதியா இரு. என்ன நடந்ததுன்னு கேக்காம இப்படி கத்திகிட்டு இருந்தா எதுவும்...

Page 50 of 58 1 49 50 51 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!