நட்பு
பல் வகை மனிதர்களை அறியும் நான்...உன் மனதினை அறியாது இருப்பேனோ?உலகம் ஆயிரம் சொல்லினும்... - நீஎனது தோழியே....உன் அடையாளம் காட்டி.... - என்தனித்துவத்தை ஒதுக்கி.... - நம்நட்பை கிள்ளியெறியாதே...... - ஆலோன் மகரி
பல் வகை மனிதர்களை அறியும் நான்...உன் மனதினை அறியாது இருப்பேனோ?உலகம் ஆயிரம் சொல்லினும்... - நீஎனது தோழியே....உன் அடையாளம் காட்டி.... - என்தனித்துவத்தை ஒதுக்கி.... - நம்நட்பை கிள்ளியெறியாதே...... - ஆலோன் மகரி
அனு நொடியும் பிரியாது வாழ்கிறேன் உன்னுடன்...... !நித்தமும் நிமித்தமாய் மாற்றி உன்னுடன் உறவாட...!நிஜத்தில் நிறைவாக....நினைவில் வாழ்கிறேன்....கனவானாலும் என் காதல் நிஜமே....!!உருவம் காணாது.....உன் மனமும் தெரியாது.....பிரபஞ்சங்களின் எண் தாண்டி....நீள்கிறது உன் மீதான என் நேசம்....!!!எக்கணம் உனைக் கண்டாலும்.....- உன்நிழலாய் மாறி நிஜத்தில் வாழ......நிதர்சனமாய் காத்திருக்கிறேன்.....!!! - ஆலோன் மகரி
அவளின் குரல் ஓசை எழுப்பவில்லை…அவளின் மனம் பெரும் ஓசையுடன் ஒலிக்கிறது…..யாரும் இல்லா தனிமையில்….நிச்சயம் வெறுமை இல்லை…மனதில் பல நூறு அல்ல.. ஒரே எண்ணம் தான்…வாழ்வின் பாதை எதை நோக்கி?கூறும் அளவு சந்தோஷம் இல்லை…சொல்ல முடியா அளவு வேதனை உள்ளது….பேசும் அளவு வரிகள் இல்லை…பேசாத பல கனவுகள் உண்டு…மாறாத ஆசைகள் உண்டு….மாறிய தடங்களும் உண்டு…இயலாத செய்கைகள் இல்லை….முயற்சியை தடுக்கும் பெருஞ்சுவர் உண்டு….காணுதற்கரிய காட்சிகள் பல கண்டும்….சராசரி நிகழ்வுகள் இயற்றப்படவில்லை….வாய் மூடாமல் வாயடித்தவள்…இன்று மௌனியாகிட ...
மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் ...!மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !மறந்த என்னை தட்டினால்(ள்) மனைவிமனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !விழித்ததும் தெளிந்தேன் நினைவை !நினைவில் இருந்தால் காதலி !காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ..... !!!!! - ஆலோன் மகரி
கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???ஆயிரம் கனவல்ல நான் காண்பது….கை எண்ணில் அடங்குபவை தான்…ஆனால்,காணும் கனவை கனவாக விடமாட்டேன்…திமில் கொண்ட காளையாக ….திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,மறுத்தாலும்…..கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா…. - ஆலோன் மகரி
பெண்ணின் புனிதம் அவளின் மனதில்....உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை..... - அவளின்உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை.....ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாதுஉன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்...கற்பானது கறை படாது இருக்கும்....கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்.... - ஆலோன் மகரி
கண்களில் காந்தமா என யோசிக்கும்பொழுது..கருந்துளை வைத்து எனை மொத்தமாக இழுத்துவிட்டாய்….முறுக்கிய மீசையிலும் ….மடித்து கட்டிய வேஷ்டியிலும்….தர்மா… இது தர்மமா?பச்சை வயலில் உன் கரம் காண - நீஎன் மனதில் விதையாகி போனாய்….ஆழமரமாக வளர்ந்து விட்டாய் ….உன் நினைவின் பாரம் தாங்காது …..உன் மார் சாய வந்தேன்…..நெற்கட்டென உன் தோளில் தூக்கி செல்லடா…. - ஆலோன் மகரி
கரைகளில் நின்று இரசிக்க வரவில்லை உன்னை…..காணாத காட்சிகள் காண விழைகிறேன்கணை கொண்டு துளைத்தாலும்….அலைக்கொண்டு தடுத்தாலும்… - என்அடி வைக்கும் முத்திரைகளை மறைக்கமுடியாது…. மறுக்கவும் முடியாது…உன்னோடான என் போராட்டம் ….அஸ்தமனத்திலும் தொடரும்….எப்போராட்டமானாலும் தாக்கவும்வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!! - ஆலோன் மகரி
மௌனம்.....இன்று அதிகம் ஆட்கொள்ள எண்ணுகிறேன்..மடைதிறந்த வெள்ளமாக இருந்த நான்...அணை கட்டிய நீராய் தேங்கி நிற்பதேனோ?பின் சென்று என்னை இழந்தேனா?முன்னே பாய பதுங்கி வாழ்கிறேனா?இந்நிலை புரிந்தும் புரியா சூழ்நிலையாக...வலையில் சிக்கி சிக்காமல் நான்.... - ஆலோன் மகரி
காற்றினில் மிதந்து வரும் காதல் நீ !உன் காதலை ஏற்று வாழும் சுவாசம் நான்!சுவாசம் முழுதும் உன் காதலே !காதலின் வடிவில் இதயம் உருவானதே !உருவான இதயமதில் நீ இருந்தாய்!இருந்தபோது இல்லாத காதல் - நான்இறந்தபோது பிறந்தது ஏனடி ?????! - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….