Tag: poem

எப்பொழுது

மனதில் பதிந்த பார்வை .....செவிதனில் நுழைந்த வார்த்தைகள் ....கண்களில் விழும் பிம்பமாய் நீ ....இதயத்தில் நுழைந்தது எப்பொழுது ......????? - ஆலோன் மகரி

மீள்

நிறைய சொல்ல நினைத்தும்வெளிவராத சொற்கள் .....ஒன்றும் இல்லை பேசதடையின்றி தாரை வார்க்கும் உதடுகள் ....இரண்டும் உணர்ந்தேன்உன் கருவிழியின் சிறையில் ....ஆளுனர்-க்கு மனு அனுப்பினேன் ...இச்சிறையில் இருந்து மீளாதிருக்க .... - ஆலோன் மகரி

கொடுங்கோல்

இன்சொல் நீ உரைத்திட்டால்இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ....கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் - உன் எண்ணங்களே என் உலகென ஆகுதடி ....செங்கோல் ஆட்சி செய்த நீ ...கொடுங்கோல் எடுத்தாயோ ....என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள ...?????? - ஆலோன் மகரி 

 தாய் மடி

இயற்கையின் இதயமாய் ….மரங்களின் குடும்பமாய் …..பறவைகளின் வீடாய் ……தென்றலின் தூணாய் …..அருவிகளின் பிறப்பாய் ….ஆற்றின் மொழிகளாக …அமைதியின் இருப்பிடமேபேராபத்தின் உறைவிடமாக - எந்தன்உள்ளம் தேடும் மகிழ்விடம் …உயிர்களின் தாய் மடியாம் …!!! - ஆலோன் மகரி 

தம்பூரா

தம்பூராவாக என் இரத்த நாளங்களே மாறி விடுகிறது உன் கண்கள் காணும்போதெல்லாம் ....தனியே ஓர் தம்பூரா உனக்கெதற்கு ?? - ஆலோன் மகரி

இறுதியில் உறுதியாக

காதல் பொய்த்து போனது …..வாழ்க்கை பொய்த்து போனது ….நம்பிக்கை பொய்த்து போனது …உறவுகள் பொய்த்து போனது ….உறுதியாக நினைத்த சில நட்பும் …இறுதியாக பொய்த்து போனது …உள்ளிருந்து வெளிப்பட்ட சிரிப்பு …அதன் காரணம் அறியேன் …நிற்காமல் வரும் சிரிப்பை நிறுத்தவும் விழையேன் ….மூடனாக இருந்திருந்தால் சிறுஅமைதி கிட்டியிருக்கும் …கண்மூடித்தனமான மூடனாய் கடந்துவிட்டேன் இத்தனை காலமும் … - நான்தனித்திருப்பது புதிதல்ல ….குழுவாய் இருந்தபோதும் தனித்தே இருந்திருக்கிறேன் ….மகாதேவா …..நீயின்றி எவரும் ...

வலி

தடம் மாறிப் போக நினைத்தது இல்லை ......வாழ்வின் அரவனைப்பில் .... - திடம்குறையாது ஓடுகிறேன் ....வலியனைத்தும் வலிமையாக ......எதிர்கொள்ள காத்திருக்கிறேன் .....எதிர்வரும் வலிகளுக்காக ..... - ஆலோன் மகரி 

வர்ணஜாலம்

அஸ்தமனமும் உதயமும் ஒரே சமயத்திலே நிகழும் ..... - அதைரசிக்கத் தெரிந்தால் வாழும் நாட்கள் வர்ணஜாலமே ... - ஆலோன் மகரி 

அர்த்தம்

அன்பே ! ஆருயிரே ! என்றபோது சிரித்தாள் .... !!அவள் சிரிப்பினில் மயங்கினோர் ஏராளம்....... - அதைஅறிந்தபோது நொந்து சிரித்தேன் !அவள் சிரித்ததன் அர்த்தம் புரிந்தேன் இன்று !!! - ஆலோன் மகரி

வெள்ளை ரோஜா

வெண்பட்டு சூடி தன்னுடல் மறைக்கும் பெண் போல .....உன் முகம் மறைத்து ....நாணச் சிவப்பை ஒளித்து ....புறக்கண் பார்வைக்கு வெள்ளைச்சோலையாய் மாறினாலும் ...என் அகக்கண் கொண்டு .... - உன் பொய்யெனும் துகிலுறித்து உனது வர்ணஜாலங்களை கண்டுவிட்டேன் ....... !!!! - ஆலோன் மகரி

Page 4 of 9 1 3 4 5 9

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!