Tag: poem

என் வழி..

என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் .. முகமறியா நட்பும் .. முகமறிந்த மோதலும் .. காதலில் தோல்வியும் .. மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் .. விடையறியா கேள்விகள் .. கேள்விகள் இல்லா விடைகள் .. எனக்கும் உனக்கும் இடையே .. தடுமாறும் மனிதர்கள் !! சொல்வது தத்துவமல்ல .. சொல்லாதிருந்தால் தவறும் அல்ல .. ஆயினும், சிறு சிறு மௌனங்கள் .. சில ...

சுவாசம்

மனதில் பல சஞ்சலங்கள் .. உனக்காக பல முயற்சிகள் .. நிறை தழும்பா மனிதனாய் நான் .. அலையுறும் ஜன்மமானேன் .. இன்றும் .. உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக .. இன்னும் அலையுறுவேன் .. பெண்ணே .. காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு .. எனது கடைசி சுவாசம் உனதாய்  இருக்க ... !  - ஆலோன் மகரி 

இருதலைக்கொள்ளி

சொல்ல ஏதும் இல்லை .. ஏதோ மனதை கவர்கிறது .. விரக்தியும், ஆர்வமும் .. மாறி மாறி ஆள்கிறது என்னை ..!! புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது .. மறந்து விட ஆர்வம் மறுக்கிறது .. இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் .. எதை நாடி போவேனோ இறுதியில் ..??? - ஆலோன் மகரி 

அழை

கனவில் வாழ்கிறேன் .. நித்தம் உன்னை காண்கிறேன் .. பதில் கூறா கேள்விகள் .. ஓடும் யுகங்கள் .. காண்பவை யாவிலும் விரக்தி .. விரயமாகும் காலங்கள் .. ஒளிக்காட்டி ஓடி மறையாது .. வழிக்காட்டி அழைத்து செல் .. !!!  - ஆலோன் மகரி 

நான் வாழ….

ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் ... ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் ...சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ....கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் .....ஹாஹா ....சொற்களும் கோர்வையில்லை ...‌மனமும் நிலையில் இல்லை ....காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ....எனக்கான நாட்களை நான் வாழ .... - ஆலோன் மகரி

பொறி

பொறித்தட்டிச் சென்றதாலே ...காதலெனும் பொறி வைத்து எனை பிடித்தாயா ? பொறி பறக்க பற்ற வைத்தாயா ? - ஆலோன் மகரி

புதியதோர் பாரதம்

அறிவுரை கூறினால் ஏற்காத பருவம் ...அனுபவத்தைத் தேடியோடும் கால்கள் ...அளவிலா ஆர்வம் ...முழு பிரபஞ்சத்தையும் அளவிட முற்படும் அறிவு ....பழமையில் புதுமையை தேடிடும் தேடல் ...பண்பில் நிகரில்லா பாரதத்தை - மீண்டும்உயிர்த்திடுவோம் வா ... - ஆலோன் மகரி 

காரணம்

காரண காரியமின்றி எதுவுமில்லை ....என் காரியங்களின் காரணம் நீயானால் ... - உன்காரணத்தின் காரியங்களாய் நான் ஆவேனோ ?? - ஆலோன் மகரி

திருப்தி

கனவிலும் கற்பனையிலும் ...வாழும் வாழ்வை ...நிஜத்தில் சுவாசிக்கவே விழைகிறேன் ...ஆனதொரு வாழ்வமைந்தால் ... ஆத்ம திருப்தியடைவேனோ..... ???!!! - ஆலோன் மகரி 

எஸ்கேப்

அதிக தூரமில்லை ...எல்லையில் நிற்கிறோம் ... - உன்எல்லையில் நீ .... - என்எல்லையில் நான் ....மக்கா எஸ்கேப் ஆகிடு.. போலீஸ் வைட்டிங் அங்க.. - ஆலோன் மகரி 

Page 3 of 9 1 2 3 4 9

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!