aalonmagari

மீண்டும் ஓர் அத்தியாயம்

கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி

மாறிவிட்டேன்

உனை பாடி காவியம் படைக்க எண்ணினேன் ...கவிதையாய் உருக வைத்தாய்....உன்னில் கரைந்து...என்னை வடிவமைத்தேன் ....இறுதியில் நீயாக மாறிவிட்டேன்.... - ஆலோன் மகரி

மாற்றம்

கடக்கின்ற நொடிகள்........நீளமாவதை உணர்கிறேன்.... - இன்னும்கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்....கொள்ளும் உணர்வினை கொல்லவா?காரணமில்லா கோபங்கள்.....அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்......விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்....வேண்டும் என யாசிக்கவில்லை....வேண்டாமென தூற்றவும் இல்லை....ஏனோ என் மனநிலையில் மாற்றம்...மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?மாற்றமே குழப்பமா ???!!! - ஆலோன் மகரி

சாராம்சம்

வாழ்க்கையின் சாராம்சத்தை ருசிக்க ...... - இரண்டு துருவத்திலும்மிகவும் அத்தியாவசியம்....காதல் மட்டுமே.....- ஆலோன் மகரி

நட்பு

பல் வகை மனிதர்களை அறியும் நான்...உன் மனதினை அறியாது இருப்பேனோ?உலகம் ஆயிரம் சொல்லினும்... - நீஎனது தோழியே....உன் அடையாளம் காட்டி.... - என்தனித்துவத்தை ஒதுக்கி.... - நம்நட்பை கிள்ளியெறியாதே...... - ஆலோன் மகரி

காத்திருக்கிறேன்

அனு நொடியும் பிரியாது  வாழ்கிறேன் உன்னுடன்...... !நித்தமும் நிமித்தமாய் மாற்றி  உன்னுடன் உறவாட...!நிஜத்தில் நிறைவாக....நினைவில் வாழ்கிறேன்....கனவானாலும் என் காதல் நிஜமே....!!உருவம் காணாது.....உன் மனமும் தெரியாது.....பிரபஞ்சங்களின் எண் தாண்டி....நீள்கிறது உன் மீதான என் நேசம்....!!!எக்கணம் உனைக் கண்டாலும்.....- உன்நிழலாய் மாறி நிஜத்தில் வாழ......நிதர்சனமாய் காத்திருக்கிறேன்.....!!! - ஆலோன் மகரி

மௌன மொழி

அவளின் குரல் ஓசை எழுப்பவில்லை…அவளின் மனம் பெரும் ஓசையுடன் ஒலிக்கிறது…..யாரும் இல்லா தனிமையில்….நிச்சயம் வெறுமை இல்லை…மனதில் பல நூறு அல்ல.. ஒரே எண்ணம் தான்…வாழ்வின் பாதை எதை நோக்கி?கூறும் அளவு சந்தோஷம் இல்லை…சொல்ல முடியா அளவு வேதனை உள்ளது….பேசும் அளவு வரிகள் இல்லை…பேசாத பல கனவுகள் உண்டு…மாறாத ஆசைகள் உண்டு….மாறிய தடங்களும் உண்டு…இயலாத செய்கைகள்...

என் கைப்பேசி

தினம் தினம் பயந்தது.....உயிர் வர போகவென இருந்தது.....எனை விட்டு போனாயே....சென்ற உயிர் திரும்பவில்லை...நிரந்தர உறக்கத்தில்.....என் கைபேசி.... - ஆலோன் மகரி

நினைவுகள்

மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் ...!மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !மறந்த என்னை தட்டினால்(ள்)  மனைவிமனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !விழித்ததும் தெளிந்தேன் நினைவை !நினைவில் இருந்தால் காதலி !காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ..... !!!!! - ஆலோன் மகரி

மனம்

கருவிழியில் தோன்றியது காதல்.....!இன்னதென்று அறியாமலே வளர்கிறது.....!நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்.....இரண்டும் வேறல்ல – ஆனால்இரண்டும் ஒன்றல்ல......இதன் பிரிவினை தெரியாமல்...திண்டாடுகிறது மனம்.....மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்........... - ஆலோன் மகரி

Page 18 of 29 1 17 18 19 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!