14 – விடா ரதி…

1.விடா ரதி…

14 - விடா ரதி…  ரகு வெளியே சென்றவன் எதையோ மறந்து மீண்டும் உள்ளே சென்றான். “என்னாச்சி அண்ணா? எதாவது மறந்துட்டீங்களா?” அவன் திரும்பி வருவதைப் பார்த்துக் கேட்டாள் சவி. “ஆமா சிஸ்டர்… ஒரு ஃபைல் மறந்துட்டேன்….” எனக் கூறியபடி தன் அறைக்குச் சென்றான். உள்ளே ரதியும் என்ன புடவை அணியலாம் என்ற யோசனையுடன் தன் அலமாரியைக் குடைந்துக் கொண்டிருந்தாள். “இந்த விசேஷம் வந்தாலே என்னடா போட்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு…. அவனுக்கு மேட்ச் அஹ் வேற இருக்கணும்… அந்த லூசு என்ன போடுமோ தெரியல….” எனக் கொஞ்சம் சத்தமாகவே தனக்குத் தானே பேசிக்கொண்டுப் புடவைகளைப் பார்த்துக்...

98 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

98 - ருத்ராதித்யன் நரசிம்மன் எழுந்து குழந்தை வடிவாக நின்ற வனதேவியை வணங்கிவிட்டு பிரயாணத்திற்கு ஏதுவாக, பெற்ற மலர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, மெல்லிய பருத்தி துணியில் நன்றாக சுற்றிக் கொண்டு, அதனை மூங்கிலில் அடைத்து யாளியின் மேலே வைத்தான். யாளியின் கழுத்தை சுற்றிலும் ஏற்கனவே கட்டியிருந்த வேரினை நீக்கி புது வேரை யாளியின் கழுத்தை சுற்றிலும் கட்டினான். யாளி எத்தனை வேகமாக சென்றாலும், அதன் மேல் அமர்பவர்கள் கீழே விழாமல் இருக்க ஏதுவாக அதன் உடலில்  முன்னும் பின்னுமாக சுற்றிலும் கொடிகளையும், சில மரக்கட்டைகளையும் கட்டி அம்பாரி போல ஏற்படுத்தினான்....

13 – விடா ரதி…

1.விடா ரதி…

13 - விடா ரதி…  அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல எழுந்து சமையல் அறையில் நுழைந்தாள். இன்னும் யாரும் எழவில்லை, அதிகாலை அமைதியும், புதுக் காற்றும் அவள் மனதை இறகாய் வருடியது. தனக்கு டீ போட்டுக் கொண்டு சமையலறையின் பக்கக்கதவை திறந்துப் பக்கவாட்டில் இருந்த கருங்கல் மேடையில் அமர்ந்து, காற்றை ஆழ சுவாசித்தாள். நேற்று இரவு பூத்த மனோரஞ்சித மலரின் நறுமணம் நாசியின் வழியாக உடல் முழுதும் பரவி, குதூகலமான உணர்வை ஏற்படுத்தியது, அருகில் இருந்த பவள மல்லியும் மெல்லிய வாசனையை அவ்விடத்தில் நிரப்பி இருக்க, கண்மூடி அமர்ந்த நொடி இந்த பிரபஞ்சம் அவளின்...

12 – விடா ரதி…

1.விடா ரதி…

12 - விடா ரதி…  அவர்கள் சென்றதும் ரதி கண்கள் கலங்கச் செல்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்வேதா அனைத்தும் முன்பே சுந்தரியின் வழியாக அறிந்து இருந்ததால் அதிர்ச்சியாகவில்லை. சவிதா நடந்தவற்றைக் கண்டு குழப்பமும், வருத்தமும் கொண்டுத் தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டாள். உள்ளே நடந்த அனைத்தும் காவலுக்கு அமர்ந்து இருந்தவர் காதிலும் விழுந்தது. ரதியின் கலங்கியக் கண்களைக் கண்டவர் ரகுவிற்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டார். “ரதி…. வந்து இங்க உக்காரு… இனிமேலாவது உன் வாழ்க்கைய நீ வாழு…. “ ஸ்வேதா அவளை ஆசுவாசப்படுத்தி அமரவைத்துத் தண்ணீர் பருக வைத்தாள். “முடியல ஸ்வே….. மனசு ரணமா இருக்கு…....

97 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

97 - ருத்ராதித்யன்  ருத்ரவிக்னன் நரசிம்மனை சுமந்துக்கொண்டு மலை ஏறியதால் ஒரு நாழிகையில் உச்சியில் இருந்தனர். அங்கே தேவி சர்ப்ப ரூபத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள். மலை ஏறும் போது வரும் எந்த சிக்கலும் அவனுக்கு இல்லையென்பதால், நேரடியாக அவனது மனதை சோதிக்கும் வகையாக மேலே பல உயிர்கள் பயத்திலும், வலியிலும் துடித்துக் கொண்டிருந்தன. அவன் உச்சியை அடைந்த மறுநொடி பெரும் சத்தத்துடன் இடியும், மின்னலும் உச்சியில் இருந்த மரத்தினை தாக்க, சிறிதாக ஆரம்பித்த தீ நொடிக்கும் குறைவாக அந்த இடம் முழுதும் பரவியது. உச்சியில் இருந்து சற்று கீழே இறங்கி நிற்கும் இடமெல்லாம்...

11 – விடா ரதி… 

1.விடா ரதி…

11 - விடா ரதி…  ரகு கடைக்குச் சென்றபிறகும் மனைவியின் செயலில் உவகைப் பொங்க, சிரிப்புடன் கடையை வலம் வந்துக் கொண்டிருந்தான். அந்நேரம் அவனது அம்மா அவனை அழைத்தார். “என்னடா ஏதோ பிரச்சனையாம்…. “ எனத் தன் செவிகளுக்கு வந்த விசயத்தைப் பற்றிக் கேட்டார். “இன்னிக்கி உன் மருமக என்ன பண்ணினா தெரியுமா?” என ஆரம்பித்து நடந்த விசயங்களைக் கூறினான். “நிஜமா அவனை அடிச்சாளா டா?” அவன் தாயின் குரலில் சந்தோசமும், நிம்மதியும் கலந்து ஒலித்தது. “ஆமா மா…... கண்டிப்பா அவனுக்கு ஒரு பக்கம் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்….”“அவனுக்கு ஜவ்வு இருந்தா என்ன இல்லைன்னா என்ன…..? உனக்காக அவ...

96 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

96 - ருத்ராதித்யன் “மகாரணியாரின் உத்தரவு விரைவில் நிறைவேற்றப்படட்டும் மந்திரியாரே.. சபை களையலாம்.. “ என மஹாராஜா கூறியதும் அங்கிருந்தவர்கள் விடைப்பெற்று கிளம்பினர். “நரசிம்மனிடம் இருந்து செய்தி வந்ததா திலகா?” என அவர் ஆர்வத்தோடு வினவினார். “ஆமாம் அரசே.. வடமேற்கு பக்கம் அவன் சென்று கொண்டிருக்கிறான். உடன் புது தோழனும் கிடைத்திருக்கிறான். அவனது பெயர் ருத்ரவிக்னன்.” என அவர் பாதி மகிழ்வுடன் கூறினார். “ஏன் ராணியின் முகம் வாட்டம் கொண்டுள்ளது?” என அவரின் மனதை அறிந்து கேட்டார். “என் மூத்த மகனின் நிலைப்பற்றி தாங்களும் கூட என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்களே அரசே.. ஏன் இப்படி? மகாராணியாக...

95 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

95 - ருத்ராதித்யன் சயன கோலத்தில் தேவியின் திருவுருவம் கண்களுக்கு தெரிந்ததும் அங்கு ஒரே தாவலில் சென்று நின்றவனை ஏமாற்றும் விதமாக மீண்டும் தேவியவள் உருவம் மறைந்தது. நரசிம்மன் மகதனை ஓர் பார்வை பார்த்துவிட்டு அங்கிருக்கும் சிறுகுன்றின் மேலே ஏறி நின்று கைகளை உயரத்தூக்கி தேவியை மனதின் ஆழத்தில் இருந்து அழைத்தான். “அம்மா வனதேவி.. உன் பிள்ளை உன்னை காண வந்திருக்கிறேன். கண்முன்னே வந்து வந்து மறைந்து மாயம் நிகழ்த்துகிறாய். உன் விளையாட்டை உணர்ந்து உள்ளம் உவகை கொண்டாலும், மறுபக்கம் உனக்கு மலர்களை சூட்ட முடியாமல் மனம் சுணங்கி நிற்கிறேன். ஏதேனும் தவறாக நான்...

10 – விடா ரதி…

1.விடா ரதி…

10 - விடா ரதி… சுந்தரியின் கழுத்தில் முகுந்தன் இறைவன் சந்நிதியில் மாங்கல்யம் சூட்டி, தன் சரிப்பாதியாக்கிக் கொண்டார். மகிழ்வுடன் ரதியும், ஸ்வேதாவும் அட்சதைத் தூவி இறைவனிடம் அவளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தித்தனர். எத்தனை எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் இருந்தாலும் இதுபோல தூய்மையான அன்பும், ஆசியும் இருக்குமிடத்தில் நல் அதிர்வுகளே எப்போதும் மேலோங்கி நிற்கும். அப்படியான நல்லெண்ணம் கொண்ட சிலரால் தான் ரதியும் இப்போது தன்னவனுடன் இணைந்து இருக்கிறாள். “டேய்…  இங்க பாரு டா… அது ரகுபதி தானே? அவன் இங்க என்ன பண்றான்?” கூட்டத்தில் ஒருவன் ரகுபதியைப் பார்த்துவிட்டு அருகில் சென்றான். “பாரு மச்சி…. புது மாப்ள...

94 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

94 - ருத்ராதித்யன் “அன்னையின் ஆசி பரிபூரணமாக கிடைத்துவிட்டது இளவரசே.. இனி தாங்கள் விரைவாக பயணத்தை முடித்து கோட்டைக்கு வாருங்கள். மற்றதை அங்கே சந்திப்போம்..” எனக் கூறிவிட்டு நரசிம்மனை வணங்கி விடைக் கேட்டான். நரசிம்மன் அவனை இறுக்கி அணைத்து, “இளவலாரே.. தங்களின் நிலைப்பற்றி யாது உரைப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த பயணம் ஆரம்பித்த நொடியில் இருந்து நானும் மகதனும் கண்டு வரும் அனுபவங்கள் சாதரணமானதாக இல்லை என்று மட்டுமே எண்ணி வந்தேன். ஆனால் நீங்கள் அனைவரும் அங்கிருந்தே இத்தனை விஷயங்களை கிரகித்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், மற்றொரு...

Page 5 of 58 1 4 5 6 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!