65 – ருத்ராதித்யன்
65 - ருத்ராதித்யன் முதலில் அந்த பள்ளத்தாக்கை தாண்டிய நாகம் எதிரே நின்ற கஜயாளியை கண்டு அந்த பகுதியின் எல்லையில் உடல் தேய்த்து சறுக்கி நின்றது. சிங்கங்கள் தாவியபடி அடுத்தடுத்து வரவும் நாகம் சிங்கங்களை தனது வாலில் சுருட்டி பிடித்து லாவகமாக தரை இறங்க வைத்தது. நானிலன் கத்திய கத்தலில் அவன் அமர்ந்திருந்த சிங்கம் எரிச்சல் கொண்டு தனது நகங்களால் கயிற்றை அறுத்து அவனை கீழே வீசியது. நானிலன் அங்கிருந்த பாறையை பிடித்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டான். வல்லகி அந்த சிங்கத்தை ஆதுரமாக தடவி கொடுத்து பிடரியில் கை நுழைத்து விளையாடவும் சிங்கமும் அவளுடன்...




