3 – அர்ஜுன நந்தன்
3 - அர்ஜுன நந்தன் நம் நாகார்ஜுனும், நந்தனும், நரேன் வீட்டில் அவன் குழந்தை தாரிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நரேனின் மனைவி அனு அவர்களுக்காகச் சுவையான விருந்து தயாரித்துக் கொண்டு இருந்தாள்.தாரிகாவிற்கு 2 ½ வயது ஆகிறது.அவள் பேசும் மழலை மொழியும், சிரிக்கும் ஓசையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அர்ஜுன் தாரிகாவிற்கு அவன் பெயரை கூறச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அவள் அர்ஜுனின் பிற்பாதி பெயரையே கூறிக்கொண்டு இருந்தாள்.அவளுக்கு இளஞ்செழியனில் இளா மனதில் பதிந்து விட அதையே உச்சரித்தாள். இருவரும் ஒரே பருவமென மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தாரிகா, "இஆ……. இங்ங் ஆ…",...